“தெலுங்கு தெரியாது.. ஆனால்..” சாதியை குறிப்பிட்டு பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பார்த்திபன்!
சென்னை: கடந்த சில நாட்களாக தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் நடிகர் பார்த்திபன். இந்நிலையில் தற்போது, தான் ஒரு நாயுடு சமூகத்தை சேர்ந்தவன் என்று ஆந்திராவில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில், திரையில் திரிஷாவின் புகைப்படம் காட்டப்பட்டபோது பார்த்திபன் ஒரு கருத்தை முன்வைத்தார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரத்தைக் குறிப்பிட்டு, "இந்த குந்தவையை கொஞ்ச நேரம் வீட்டிலேயே 'குந்த' வைப்பது நல்லது; அவர் வெளியே வராமல் இருப்பதே பல பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும்" என்று கிண்டலாக கூறினார்.

பார்த்திபன் - த்ரிஷா சர்ச்சை
நடிகரும், தவெக தலைவருமான விஜய்யுடன், நடிகை திரிஷா சமீபத்தில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டது சமூக வலைதளங்களில் விவாதமாகி இருந்த சூழலில், பார்த்திபனின் இந்தப் பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
பார்த்திபனின் இந்தப் பேச்சுக்கு திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் காட்டமாக பதிலடி கொடுத்தார். "ஒரு மைக் கிடைத்துவிட்டால் எதை வேண்டுமானாலும் பேசிவிடலாம் என்று நினைப்பது புத்திசாலித்தனம் அல்ல.. அது முட்டாள்தனத்தை உரக்கச் சொல்வது போன்றது. ஒருவரைப் பற்றித் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்துவது அந்த நபரைப் பற்றிச் சொல்வதை விட, பேசுபவரின் தரத்தையே காட்டுகிறது" என்று பதிவிட்டார்.
அதற்கு பதிலாக பார்த்திபனும் தொடர்ந்து இரண்டு வீடியோக்களை வெளியிட்டு விளக்கம் அளித்தார். அந்த வீடியோக்களிலும் அவர் தனது பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக கூறியிருந்தார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஜாதி பற்றி பார்த்திபன் பேச்சு
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் ஒரு திரைப்பட விழாவில் பங்கேற்ற பார்த்திபன் தனது ஜாதி குறித்து பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பார்த்திபன் நடிப்பில் அடுத்து தெலுங்கில் வெளியாக உள்ள திரைப்படம் 'உஸ்தாத் பகத் சிங்'. பவன் கல்யாண், ஸ்ரீலீலா, ராஷி கன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தில் பார்த்திபன் வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படம் வரும் மார்ச் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் பார்த்திபன் பேசும்போது, "என்னுடைய முழுப் பெயர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். நான் ஒரு நாயுடு பையன். நான் சென்னையில் வளர்ந்ததால் தெலுங்கு தெரியாது. அதனால் இயற்கையாகவே தமிழ் சரளமாக வரும். தெலுங்கு கொஞ்சம் கொஞ்சம் தெரியாது. ஆனால், இந்தப் படத்தின் வெற்றி விழாவுக்கு வந்து உங்களை சந்திப்பேன். அப்போது நான் உங்களிடம் வந்து சரளமாக தெலுங்கு பேசுவேன் என்பதை இந்த மூர்த்தி உங்களுக்கு வாக்களிக்கிறான். மூர்த்தி என்பது என்னுடைய ஒரிஜினல் பெயர்." என்று பேசியிருந்தார்.
தமிழ்நாட்டில் புரட்சி பேசும் பார்த்திபன், ஆந்திராவில் குறிப்பிட்ட சமூக அடையாளம் குறித்து பேசியதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். திரையுலகில் நீண்ட கால அனுபவம் கொண்ட பார்த்திபன், முற்போக்கு கருத்துகளைப் பேசுபவர். பொது மேடையில் தனது சாதி அடையாளத்தை முன்னிறுத்திப் பேசியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
“எப்படி மாற்ற முடியும்?” மேடையில் நடந்தது இது தான்..! சாதி சர்ச்சைக்கு பார்த்திபன் நேரடி பதில்.. அடுத்த பஞ்சாயத்து! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications