வடநாட்டில் இருந்து வருவது மதப்புயல் அல்ல, மடப் புயல்.. அது வேலைக்கே ஆகாது.. நடிகர் சத்யராஜ் கிண்டல்
சென்னை: வட மாநிலத்தில் இருந்து மதப்புயல் ஒன்று தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதை உள்ளே விட்ராதீங்க என்று கூறுகிறார்கள். அதை நாம் விடமாட்டோம். அது வடமாநிலத்தை பொறுத்தவரை தான் மதப்புயல்.. தமிழ்நாட்டில் அது மடப்புயல் தான் என்று கிண்டலடித்துள்ளார் நடிகர் சத்யராஜ்.
முதல்வர் மு.க ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் விழா சிறப்பு பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. திமுக சார்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு பேசினார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று சொன்னாலே உற்சாகம் பிறக்கிறது என்று சொன்னார் சத்யராஜ்.

தொடர்ந்து பேசிய அவர், வட மாநிலத்தில் இருந்து மதப்புயல் ஒன்று தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதை உள்ளே விட்ராதீங்க என்று கூறுகிறார்கள். அதை நாம் விடமாட்டோம். அது வடமாநிலத்தை பொறுத்தவரை தான் மதப்புயல்.. தமிழ்நாட்டில் அது மடப்புயல் தான். ஏனெனில் இங்கு எல்லா மதங்களை சேர்ந்தவரும் அண்னன் தம்பி போல் பழகிக்கொண்டிருக்கிறோம்.. இங்கு வந்து மதத்தை வைத்து அரசியல் செய்யவே முடியாது.
அதனால் தான் அது மதப்புயல் அல்ல, மடப்புயல் என்று சொல்கிறேன். இங்கு எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் அவ்வளவு ஒற்றுமையாக நண்பர்களாக இருக்கிறோம். இங்கு எப்படி மதத்தை வைத்து அரசியல் செய்ய முடியும்.
நம்மை படிக்கவிட கூடாது என்று பல தடைகளை உருவாக்கினர். ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்கிறோம். இன்று தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் பெரிய அளவில் வந்து விட்டனர். இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் மிகப்பெரிய சாதனை என்று சொன்னார் நடிகர் சத்யராஜ்.












Click it and Unblock the Notifications