Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கலான் சக்ஸஸ் மீட் விருந்து! மாதம்பட்டி சமையல் குழுவுக்கு நடிகர் விக்ரம் போட்ட ஒரு நிபந்தனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கலான் படத்தின் வெற்றியை அடுத்து நடிகர் சியான் விக்ரம், படக்குழுவினருக்கு விருந்து படைத்தாராம். அந்த விருந்தில் முக்கியமான ஒரு விஷயத்தை சியான் வலியுறுத்தினாராம். அது போல் விருந்தில் மெனுக்களுக்கான சில இன்புட்ஸை கொடுத்தது யார் தெரியுமா?

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் தங்கலான் படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்று (ஆகஸ்ட் 30ஆம் தேதி) இந்த திரைப்படம் இந்தியில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது.

thangalan vikram

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படம் வெளியாகி வெற்றி கிடைத்ததை அடுத்து விக்ரம் ஒரு சக்ஸஸ் பார்ட்டியை படக்குழுவுக்கு வைத்திருக்கிறார். அந்த விழாவில் பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவுக்கு மாதம்பட்டி பாகஷாலாவில் இருந்து மாதம்பட்டி தங்கவேலு குழுவினர் அறுசுவை விருந்தை படைத்தனர். இதில் வரவேற்பு பானமாக வாட்டர்மெலான் ஜிஞ்சர் ஜூஸும், பைன்ஆப்பிள் மேங்கோ மின்ட் ஜூஸும் வழங்கப்பட்டது. இனிப்பு பூசணிக்காய் அல்வா, இளநீர் பாயாசம் பரிமாறப்பட்டது.

அது போல் மட்டன் சாப்ஸ், கறிவேப்பிலை வஞ்சிரம் மீன் பிரை, இறால் நெய் ரோஸ்ட், ஈரோடு சிறப்பு பிச்சு போட்ட கோழி மிளகு வறுவல், சிக்கன் குழம்பு கலக்கி, வெஜ் மட்டன் சாப்ஸ், வெஜ் ஃபிஷ் ஃபிரை, ஜலபினோ சீஸ் சமோசா- சாஸ் ஆகியவை ஸ்டார்ட்டர்ஸாக பரிமாறப்பட்டது.

அது போல் விருதுநகர் பன் பரோட்டா, சிக்கன் பள்ளிப்பாளையம் கிரேவி- மஷ்ரூம் பள்ளிப்பாளையம் கிரேவி, ஆம்பூர் ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி, ஆம்பூர் ஸ்பெஷல் வெஜ் சிக்கன் தம் பிரியாணி- ரைதா, மினி பன் தோசை, தேங்காய் சட்டினி, ஆந்திரா மீன் குழம்பு, சைவ மீன் குழம்பு, மிளகு ரசம், அப்பளம், மாங்காய் ஊறுகாய் ஆகியவை பிரதான உணவாக வழங்கப்பட்டது.

அது போல் இறுதியாக சுலைமான் டீ, ஐஸ்கிரீம், பீடா ஆகியவையுடன் விருந்து முடிந்தது. இந்த விருந்து 600 பேருக்கு வழங்கப்பட்டது. படத்தில் பணியாற்றிய அத்தனை பேரும் கலந்து கொண்டனர். 500 பேருக்கு அசைவமும் 100 பேருக்கு சைவமும் பரிமாறப்பட்டது. இந்த விருந்தில் முக்கிய அம்சம் என்னவென்றால் நடிகர் விக்ரம், சமையல் குழுவிடம் ஒரு விஷயத்தை ஸ்டிரிக்ட்டாக சொல்லிவிட்டாராம்.

thangalan vikram

அதாவது அனைத்து குழம்புகளும் சிறுவாணி ஆற்று தண்ணீரில்தான் வைக்க வேண்டும் என்பதுதான் அவரது நிபந்தனையாம். அது போல் இந்த மெனுக்களில் சில இன்புட்களை விக்ரம் மனைவி சைலஜா வழங்கினாராம். பொதுவாகவே அந்தந்த ஊர் தண்ணீருக்கென தனி ருசி இருப்பது அனைவருக்கும் தெரியும்.

அந்த வகையில்தான் திருநெல்வேலி அல்வாவுக்கு தனி ருசி உள்ளது. அது போல் மாதம்பட்டி குழுமம் சமைக்கும் சமையலில் கூட கோவை சிறுவாணி ஆற்று தண்ணீரை முறையான உரிமம் பெற்று பயன்படுத்துகிறார்களாம். அதனால்தான் அவர்களுடைய உணவுக்கு அத்தனை ருசி இருப்பதாக சொல்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+