அணில் மாதிரி உதவி செய்யலாமேனு.. பாஜகவில் இணைந்தது ஏன்? நடிகை கஸ்தூரி கொடுத்த விளக்கம்!
சென்னை: பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு ஆதரவாக ஒரு அணில் மாதிரி நமது பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே பாஜகவில் இணைந்ததாக நடிகை கஸ்தூரி விளக்கம் கொடுத்துள்ளார். திமுகவினர் தன்னை சங்கி, சங்கி என்று கூறி வந்ததாக கூறிய அவர், சங்கி என்பதை பெருமையாக சுமந்துவிடலாம் என்று நினைத்து பாஜகவில் இணைத்துக் கொண்டதாகவும் கூறி இருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த நடிகை கஸ்தூரி, இன்று தன்னை நயினார் நாகேந்திரன் முன்பாக பாஜகவில் இணைத்துக் கொண்டார். பாஜகவுக்கு ஆதரவாக கடந்த முறை வாக்கு சேகரித்த அவர், நேரடியாக பாஜகவில் இணைவதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலுக்கு 8 மாதங்களுக்கு முன்பாக கஸ்தூரில் பாஜகவில் இணைந்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் அதிமுக வலுவாக இருக்கும் நிலையில், தவெக வேகமாக வளர்ந்து வரும் கட்சியாக இருக்கிறது. இருப்பினும் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவில் கஸ்தூரி இணைந்திருக்கிறார். இந்த நிலையில் பாஜகவில் இணைந்தது ஏன் என்பது தொடர்பாக நடிகை கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 79வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.
ஆனால் தமிழ்நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லை.. பெண்களுக்கு சுதந்திரம் இல்லை.. உயிர் வாழ்வதற்கு கூட வாய்ப்பில்லாத சூழல் இல்லாமல் உள்ளது. சமீப காலங்களில் நடந்த சம்பவங்கள் எனக்கு கோபத்தை அதிகரித்துக் கொண்டே இருந்தது. அதற்காக நாம் குரல் கொடுக்கும் போது, ஆளுங்கட்சி ஆதரவாளர்கள், திமுக கூட்டணிக் கட்சியினரிடம் இருந்துதான் வந்தது. குறிப்பாக என்னை சங்கி என்று விமர்சித்தார்கள்.
என்னை சங்கி, சங்கி என்று சொல்ல சொல்ல, திமுக எதிர்ப்பு என்பது பாஜக தான் என்று எனது தலையில் அவர்கள் ஏற்றிவிட்டார்கள். அதனால் நயினார் நாகேந்திரனை சந்தித்து எனது மக்கள் பணியை சுதந்திரமாக செய்வதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கோரினேன். அதற்கு அவர், இதனை தானே பல நாட்களாக கேட்கிறோம் என்று கூறினார். எங்களின் சிந்தனை ஒரே கோட்டில் இணைந்தது.
அதனால் பாஜகவில் இணைந்துள்ளேன். கட்சி அரசியலே செய்யக் கூடாது என்றே இருந்தேன். கட்சி சார்பின்றி இயங்கும் பல்வேறு அமைப்புகளுக்கும் இவர்கள் கட்சி சாயம் பூசிவிடுகிறார்கள். எல்லோருக்கும் அரசியல் சாயம் பூசப்படுவதால், அந்தப் பெயரை பெருமையாகவே சுமந்துவிடலாம் என்று நினைத்து பாஜகவில் இணைந்துவிட்டேன்.
அதேபோல் ஆபரேஷன் சிந்தூருக்கு பின் பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு ஆதரவாக, ஒரு குடிமகளாக ஏதாவது ஒரு வகையில் பாஜகவுக்கு அணில் மாதிரி பணியாற்ற வேண்டும் என்று தோன்றியது. இதுவும் முக்கியமான காரணம் என்று தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் நிலையில் நடிகை கஸ்தூரி இணைந்திருப்பது, பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
-
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல் -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
வரிசையாக காலை வாரும் தலைவர்கள்.. காங்கிரஸுக்கு விழுந்த மரண அடி.. இப்படியே போன தோல்வி உறுதி! -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications