ராவணனையே சாய்த்த பெண்ணாசை... ராஜகோபாலை விட்டு வைக்குமா?.. கஸ்தூரி டிவீட்
ராஜகோபாலுக்கு சிறை சென்றது குறித்து கஸ்தூரி ட்விட் போட்டுள்ளார்
Recommended Video
சென்னை: "ராவணனையே சாய்த்த பெண்ணாசை... ராஜகோபாலை விட்டுவைக்குமா? " என்று அண்ணாச்சி ஜெயிலுக்கு போனதை பற்றி நடிகை கஸ்தூரி ட்வீட் போட்டுள்ளார்.
சமூகத்தை பாதிக்கக்கூடிய எந்த விவகாரமாக இருந்தாலும் சரி, அல்லது பொதுநலன் சார்ந்த கருத்துக்களாக இருந்தாலும் சரி உடனுக்குடன் வந்து தனது கருத்தை பதிவிட்டு விடுவார் நடிகை கஸ்தூரி.
பல சமயங்களில் இவரது ட்வீட்டுகளுக்கு நிறைய வரவேற்பு கிடைக்கும் என்றாலும் சில சமயங்களில் நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொண்டு அதற்கு மன்னிப்பும் கேட்டு விடுவார். இப்போது சரவண பவன் ஓனர் ராஜகோபால் சிறைக்கு சென்றுள்ளது பற்றி கருத்து சொல்லி ட்வீட் போட்டுள்ளார்.
இது ஓகேவா..? மும்பையிலிருந்து சபாநாயகருக்கு ஸ்பீட் போஸ்ட்டில் வந்த எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம்
வலிமைமிக்கவர்கள் எப்படி வீழ்ந்தார்கள்? ராவணனையே சாய்த்த பெண்ணாசை... ராஜகோபாலை விட்டுவைக்குமா ? இனி.... சிறையில் சரவண பவன்! மில்லியன் கணக்கில் வாடிக்கையாளர்களை மட்டுமல்ல, லட்சக்கணக்கான ஊழியர்களையும், விற்பனையாளர்களையும் உருவாக்கி உள்ளது சரவண பவன். இந்த கடினமான நேரத்தில் சரவண பவன் மீண்டு வர வேண்டும்" என்று பாராட்டி வாழ்த்தியதுடன், அண்ணாச்சிக்கும் ஒரு கொட்டு வைத்துள்ளார்.
How the mighty have fallen.
— Kasturi Shankar (@KasthuriShankar) July 10, 2019
ராவணனையே சாய்த்த பெண்ணாசை... ராஜகோபாலை விட்டுவைக்குமா ? இனி.... சிறையில் சரவண பவன் !
Saravana bhavan feeds not just miilions of customers , also lakhs of employees & vendors. Wishing the legendary chain strength to last out this difficult time.
கஸ்தூரியின் இந்த ட்வீட்டுக்கு வழக்கம்போல் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். "அந்த ராவணன் ஆசைப்பட்ட சீதையின் கணவன் கையால் செத்தான்.. இந்த ராவணன்! ஆசைப்பட்ட ஜீவஜோதியின் கணவனையே கொன்றுவிட்டானே..!" என்கிறது ஒரு ட்வீட்.
அந்த ராவணன் ஆசைப்பட்ட சீதையின் கணவன் கையால் செத்தான்..
— ⚡SJB⚡ (@ZatatK3clUGnAY4) July 10, 2019
இந்த ராவணன்
ஆசைப்பட்ட ஜீவஜோதியின் கணவனையே கொன்றுவிட்டானே..!
"தெய்வம் நின்று கொல்லும் ஆனால் இப்போது எல்லாம் சட்டம் இன்றே தண்டிக்கிறது.... அனைவரும் சட்டத்திற்கு ஒன்று என்பதை புரிய வைத்துள்ளேன்" என்று நீதிமன்றத்தை பாராட்டி மற்றொரு ட்வீட் வந்து விழுகிறது.
தெய்வம் நின்று கொள்ளும் ஆனால் இப்போது எல்லாம் சட்டம் இன்றே தண்டிக்கிறது.... அனைவரும் சட்டத்திற்கு ஒன்று என்பதை புரிய வைத்துள்ளேன்
— esakiappan (@esakiap68470143) July 10, 2019