நடிகை மீரா மிதுன் மனநல மருத்துவமனையில் அனுமதி.. பட்டியலின மக்கள் குறித்த அவதூறு வழக்கில் ஆஜராகவில்லை
சென்னை: பட்டியலின மக்களை அவதூறாக பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. டெல்லியில் கைது செய்யப்பட்ட மீரா மிதுன் தற்போது மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.
இன்று மீரா மிதுன் ஆஜராக இருந்த நிலையில், மன அழுத்தம் காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.

பட்டியலில் மக்களை அவதூறாக பேசிய வழக்கில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடிகை மீரா மிதுன் தலைமறைவாக இருந்தார். அவரை கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என மத்திய குற்றப்பிரிவுக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் டெல்லியில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனை கடந்த 4ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மன அழுத்தம் காரணமாக அவர் டெல்லியில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றும், அவரை சென்னைக்கு அழைத்து வர இயலவில்லை எனவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கின்றனர்.
வழக்கு பின்னணி
பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மீது, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 7 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீரா மிதுனையும் அவரின் நண்பர் சாம் அபிஷேகையும் கைது செய்தனர்.
பின்னர் இருவரும் ஜாமினில் வெளிவந்தனர். ஆனால் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் நடிகை மீரா மிதுன் தவிர்த்து வந்தார். இதனையடுத்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் தலைமறைவாக இருந்த நிலையில் அவரைப் பிடிக்க காவல்துறை திணறி வந்தது. இந்நிலையில் டெல்லியில் உள்ள மீரா மிதுனை மீட்டு தர கோரி அவரது தாயார் தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஆகஸ்ட் 11ஆம் தேதிக்குள் வீராமிர்தனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications