Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகை மீரா மிதுன் மனநல மருத்துவமனையில் அனுமதி.. பட்டியலின மக்கள் குறித்த அவதூறு வழக்கில் ஆஜராகவில்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பட்டியலின மக்களை அவதூறாக பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. டெல்லியில் கைது செய்யப்பட்ட மீரா மிதுன் தற்போது மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.

இன்று மீரா மிதுன் ஆஜராக இருந்த நிலையில், மன அழுத்தம் காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.

Meera Mitun hospital delhi

பட்டியலில் மக்களை அவதூறாக பேசிய வழக்கில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடிகை மீரா மிதுன் தலைமறைவாக இருந்தார். அவரை கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என மத்திய குற்றப்பிரிவுக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் டெல்லியில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனை கடந்த 4ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மன அழுத்தம் காரணமாக அவர் டெல்லியில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றும், அவரை சென்னைக்கு அழைத்து வர இயலவில்லை எனவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கின்றனர்.

வழக்கு பின்னணி

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மீது, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 7 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீரா மிதுனையும் அவரின் நண்பர் சாம் அபிஷேகையும் கைது செய்தனர்.

பின்னர் இருவரும் ஜாமினில் வெளிவந்தனர். ஆனால் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் நடிகை மீரா மிதுன் தவிர்த்து வந்தார். இதனையடுத்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் தலைமறைவாக இருந்த நிலையில் அவரைப் பிடிக்க காவல்துறை திணறி வந்தது. இந்நிலையில் டெல்லியில் உள்ள மீரா மிதுனை மீட்டு தர கோரி அவரது தாயார் தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஆகஸ்ட் 11ஆம் தேதிக்குள் வீராமிர்தனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+