நான் அந்த 'பார்ட்டி'க்கு போயிருக்க கூடாது.. போனதால்தான் அது நடந்தது.. நிவேதா பெத்துராஜ்
மீடு பிரச்சனைக்கு நானும் ஆளானேன் என்று நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார்.
சென்னை: "நான் 'அந்த பார்ட்டிக்கு' போய் இருந்திருக்கவே கூடாது. அதனால் நான் நானும் பாலியல் பிரச்சனைக்கு ஆளானேன்" என்று நடிகை நீது பெத்துராஜ் தெரிவித்துள்ளார்.
மீடூ வந்தாலும் வந்தது, எல்லா பெண் பிரபலங்களும் தங்களின் பாலியல் இன்னல்களை வெளிப்படையாக வந்து சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். இப்படிப்பட்ட பெண்களின் தைரியங்கள் பாராட்டப்பட வேண்டியது. துணிந்து கருத்து சொல்வதும் வரவேற்ககூடியது.

ஜனநாயக அடிப்படை
இதன்மூலம் குற்றஞ்சாட்டப்படுவர்களுக்கு கெட்ட பெயர் வருகிறதோ இல்லையோ, இப்படி புகார் அளிப்பவர்களின் பெயர்கள் வெகுவாகவும் வேகமாகவும் கெட்டு வருகிறது என்பதுதான் மீடூ இதுவரை உணர்த்திய உண்மை. எந்த புகார் என்றாலும் ஆதாரம் தேவை. இதுதான் காவல்துறை, நீதிமன்ற, ஜனநாயக அடிப்படை நியதி.

காலில் ஏன் விழுந்தார்?
ஆனால் சின்மயி விவகாரத்தை பொறுத்தவரை, இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் இவர் பாலியல் தொந்தரவுக்கு ஆளான விஷயம் மட்டும் நாடு முழுக்க தெரிந்துவிட்டது. அதோடு ஆதாரம் தேடி கொண்டு வருகிறேன் என்று போனார். அவர் இன்னும் வரவே இல்லை. ஆனால், சின்மயி ஏன் வைரமுத்து காலில் விழ வேண்டும், ஏன் பாடலாசிரியரை விழாக்களில் புகழ வேண்டும், ஏன் காவல் நிலையம், நீதிமன்றம், சினிமா சங்கங்களின் உதவியை நாடவில்லை என்று மட்டும் கேள்வி கேள்விமேல் கேட்டு வறுபட்டு போனார்.

ஆடியோ விழா
இதேபோலதான் 'திருட்டு பயலே' இரண்டாம் பாகத்தில் நடித்தபோது தன்னிடம் சுசி கணேசன், தவறாக நடந்து கொண்டதாக அமலாபால் குற்றம்சாட்டியிருந்தார். இப்படி சொன்னதும், 'திருட்டுப்பயலே' 2 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அமலாபால் சுசி கணேசனை வெகுவாக பாராட்டும் காட்சியை நெட்சன்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

நல்ல மனிதர்
அப்போது பேசிய அமலாபால், "சுசி கணேசன் நல்ல ஒரு மனிதர், எனக்கு நல்ல பாடங்களை கற்றுக்கொடுத்தார்" என்று சொல்லி இருக்கிறார். தவறாக நடந்து கொண்ட சுசிகணேசனை அமலாபால் அப்போதே ஏன் பகிரங்கபடுத்தி குற்றஞ்சாட்டவில்லை? ஏன் நாலு பேர் முன்னிலையில் பாராட்டி கொண்டு இருக்கிறார்? என்பன போன்ற கேள்விகளும் தாறுமாறாக வந்து கொண்டிருக்கின்றன.

அந்த பார்ட்டி
அடுத்ததாக நடிகை நிவேதா பெத்துராஜ், 5 வயதிலேயே தான் பாலியல் புகாருக்கு ஆளானதாக கூறினார். தற்போது நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போதும், ‘மீ டூ' பிரச்சினையில் நானும் சிக்கி இருக்கிறேன். ஒரு ‘பார்ட்டி'க்கு போன இடத்தில், அது நடந்தது. நான் துபாயில் வளர்ந்த பெண் என்றாலும், மதுரையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண். வெட்கம், பயம் காரணமாக நான் அதை வெளியில் சொல்லவில்லை.

கவர்ச்சி படங்கள்
தவறு என் மீது தான். நான் அந்த ‘பார்ட்டி'க்கு போயிருக்க கூடாது. போகாமல் இருந்தால் பலாத்கார முயற்சியை தவிர்த்து இருக்கலாம்" என்று சொல்லி இருக்கிறார். ஆனால் இணையத்தில் நிவேதா பெத்துராஜின் கவர்ச்சி படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்கள் நெட்டிசன்கள். இதை பற்றி கேட்டால், "அந்த படங்கள் எல்லாம் நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு, ‘மாடலாக' இருந்தபோது எடுக்கப்பட்டவை" என்று கூறி சமாளித்து வருகிறார்.

மதிப்பு - நீதி
பாலியல் புகாருக்குள்ளானோம் என்று சொல்பவர்கள் இப்படி முன்வந்து ஆதாரம் இல்லாமல் புகார் அளிக்கும்போது மீண்டும் தங்களை தாங்களே அசிங்கப்படுத்தி கொள்கிறார்களோ என்று நினைக்க தோன்றுகிறது. ஆதாரத்துடன் வந்து பொதுமக்களை சந்தித்தால்தான் எதற்குமே மதிப்பும், நீதியும் என்பதை புகார் அளிக்குமுன் பிரபலங்கள் யோசிக்க வேண்டும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications