நைட் பார்ட்டிக்கு சென்ற யாஷிகா ஆனந்த்.. காரில் அதிவேக பயணத்தால் விபத்து.. டிரைவிங் லைசன்ஸ் பறிமுதல்
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுநர் உரிமத்தை மாமல்லபுரம் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
Recommended Video
பஞ்சாபை சேர்ந்தவர் யாஷிகா ஆனந்த். ஒரு மாடலான இவர் விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர். இவர் இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற படத்திலும் நடித்துள்ளார்.
இன்னும் இவரது கையில் 5 க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. இந்த நிலையில் இவர் நேற்று முன் தினம் இரவு தனது தோழி மற்றும் இரு ஆண் நண்பர்களுடன் மாமல்லபுரத்தில் இரவு பார்ட்டிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
நள்ளிரவு பார்ட்டி.. அதிவேகமாக காரை ஓட்டிய யாஷிகா ஆனந்த்.. நடிகைக்கு எலும்பு முறிவு?.. நடந்தது என்ன?
நள்ளிரவு பார்ட்டி
பார்ட்டி முடித்துவிட்டு காரில் இவர்கள் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது காரை யாஷிகா ஓட்டினார். அவரது தோழி வள்ளிச்செட்டி பவானி அருகில் அமர்ந்திருந்தார். பின்புறம் சையது, ஆமீர் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
தடுப்புச் சுவர்
அப்போது அவரது கார் கிழக்கு கடற்கரைச் சாலையில் சூலேறிக்காடு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வள்ளிச் செட்டி பவானி பலியானார். மற்ற மூவர் காயமடைந்தனர். இதில் யாஷிகாவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக சொல்லப்படுகிறது.
விபத்திற்கான காரணம்
இந்த விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து மாமல்லபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். யாஷிகா வேகமாக வந்ததே விபத்திற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. அவர் மது அருந்தி இருந்தாரா என்பதையும் போலீஸார் விசாரிக்கிறார்கள்.
ஓட்டுநர் உரிமம்
இந்த நிலையில் யாஷிகா ஆனந்தின் ஓட்டுநர் உரிமத்தை மாமல்லபுரம் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். காரை அதிக வேகத்தில் இயக்கியது, விபத்தை ஏற்படுத்தியது, உயிரிழப்பை ஏற்படுத்தியது என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.