கூவத்தூரில் நடிகைகளா? 'என்ன முட்டாள்தனம் இது'.. சேலம் ஏ.வி.ராஜுவை வெளுத்துவிட்ட நடிகை ஷர்மிளா
சென்னை: கூவத்தூரில் நடிகைகள் வந்ததாக சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு அளித்த பேட்டி கடும் சர்ச்சையாகி உள்ளது. இந்த விவகாரத்தில் ஏ.வி.ராஜுவை நடிகை ஷர்மிளா கடுமையாக விமர்சித்துள்ளார்.
சேலம் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாச்சலம் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடியில் இருப்பதாகவும், அதிகளவில் சொத்து குவித்து உள்ளதாகவும் அதிமுக சேலம் மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு பேட்டியில் கூறினார். இதையடுத்து சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருந்து ஏ.வி.ராஜுவை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இதனிடையே இந்த விவகாரத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு , சென்னையை அடுத்த கூவத்தூரில் 2017ம் ஆண்டு நடந்த சம்பவம் என்று கூறி சில விவகாரங்களை தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி தொடர்பான பல்வேறு பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதுபற்றி பேட்டி அளித்த ஏவி ராஜூ கூறுகையில், "எடப்பாடி பழனிசாமி என்னை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது. எடப்பாடி பழனிசாமி கட்சியை நடத்த தெரியாமல் நடத்திக்கொண்டு இருக்கிறார். கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தானே இவர். இவருக்கு எப்படி அதிமுகவின் கட்சி விதிகள் தெரியும். கட்சியில் இருந்து நீக்கும் முன் நோட்டீஸ் தர வேண்டும் என்ற அடிப்படை விதி கூட எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவில்லை. கட்சியின் சட்ட திட்டங்கள் கூட தெரியாமல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருப்பது வேதனைக்குரியது.

நீ சாதாரண ஒரு எம்எல்ஏ. நீ கூவத்தூரில் என்ன கூத்து அடித்தாய் என்று தெரியும். அதிமுக எம்எல்ஏ வெங்கடாச்சலம் என்ன கூத்து அடித்தார்.. என்ன செய்தார்.. அங்கே நடிகைகளுடன் என்ன செய்தார் என்றெல்லாம் தெரியும். அந்த பிரபல நடிகையை அவர் கேட்டார். அவர்தான் வேண்டும் என்று அடம்பிடித்தார் . கருணாஸ் அங்கே இருந்தார். அவர்தான் ஏற்பாடு செய்தார். இதற்கெல்லாம் காசு கொடுத்தது எடப்பாடி பழனிச்சாமிதான். இதற்கு நான் ஆதாரம் எல்லாம் காட்ட முடியாது. ஆனால் இதெல்லாம் நடந்தது. என்னை நீக்கியது போல அதிமுக மாவட்ட செயலாளர்கள் யாரையாவது 2 பேரை எடப்பாடி பழனிசாமியால் கட்சியை விட்டு நீக்க இயலுமா? அப்படி 2 மா.செக்களை நீக்கினால் எடப்பாடி பழனிசாமியின் பொதுச் செயலாளர் பதவியே பறிபோய்விடும்" இவ்வாறு ஏவி ராஜூ அளித்த பேட்டி பெரும் சர்ச்சையாகி உள்ளது.
ஏவி ராஜூ அளித்த பேட்டி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பலரும் ஏவி ராஜூவிற்கு கடும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். நடிகை ஷர்மிளாவும் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், என்ன முட்டாள்தனமாக இந்த தோழர் இப்படி பேசுகிறார்? அவர் தனது தனிப்பட்ட பழிவாங்கலுக்காக சினிமாவில் பெண்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்... ஒட்டுமொத்த மீடியாவும் கூவத்தூர் ரிசார்ட்டுக்கு வெளியே முகாமிட்டிருந்தது... இத்தனை ஊடகத்தையும் மீறி ஒரு பிரபல நடிகையை அங்கு அழைத்துச் செல்வது எப்படி சாத்தியம்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications