அமைச்சர்கள் சென்னையில் முகாம்... இடைத்தேர்தலில் சுணக்கம் காட்டும் அதிமுக
Recommended Video
சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரம் வருகையையொட்டி ஒட்டுமொத்த அமைச்சர்களும் சென்னையில் முகாமிட்டுள்ளதால் நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டியில் அதிமுகவின் தேர்தல் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் 11-ம் தேதி சென்னை வரவுள்ளதால் தமிழக அரசு சார்பில் அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அமைச்சர்கள் அனைவரும் சென்னையிலேயே தங்கி ஆய்வு உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். சென்னையில் இருந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் புறப்பட்ட பின்னரே அமைச்சர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள் எனத் தெரிகிறது.

விக்ரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பது அதிமுகவின் இலக்கு. இதற்காக, அமைச்சர்களுக்கு தேர்தல் பணியாற்ற வேண்டிய இடங்கள் பிரித்து கொடுக்கப்பட்டிருந்தது. அவர்களும் தொகுதிகளில் தங்கி நிர்வாகிகளை வேலை வாங்கி வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் முதல் அமைச்சர்கள் இரண்டும் தொகுதிகளிலும் இல்லை. எல்லோரும் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக அதிமுக வட்டாரத்தில் நாம் பேசிய போது, சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரதமர் மோடியும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுவது சர்வதேச அளவிலான முக்கியமான சந்திப்பு. இந்த நேரத்தில் அந்தச்சந்திப்புக்கு தேவையான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமை. அதனால் அமைச்சர்கள் இங்கு தங்கி அதற்கான பணிகளை கவனித்து வருகின்றனர்.
வரும் 13-ம் தேதிக்கு பிறகு இரண்டு தொகுதிகளிலும் அமைச்சர்கள் அதிதீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள், எங்கள் தேர்தல் பணியில் எந்த சுணக்கமும் இல்லை. அமைச்சர்கள் அங்கு இல்லாததால் உங்களுக்கு அப்படி தெரிகிறது என தெரிவிக்கப்பட்டது. இதனிடையே அமைச்சர்கள் இல்லாத நேரத்தை பயன்படுத்தி திமுக வாக்குகளை வளைக்கத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications