பிரதமர் மோடி சென்னை வருகையும்.. அதிமுக பொதுக்கூட்டம் ஒத்தி வைப்பும்! எடப்பாடி எடுத்த திடீர் முடிவு!
சென்னை: பிரதமர் மோடி நாளை சென்னை வரவுள்ள நிலையில், நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அதிமுக பொதுக்கூட்டம் வேறொரு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை எனக் கூறிக்கொண்டாலும் இன்னும் பிரதமர் மோடி உட்பட பாஜக தலைவர்களை எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தை கூட விமர்சித்து பேசவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்தச் சூழலில் தான் அதிமுக பொதுக்கூட்டம் ஒத்தி வைப்பு தொடர்பாக அக்கட்சியின் தலைமைக்கழகம் விடுத்துள்ள பதிவு வருமாறு;

''கழக நிறுவனத் தலைவர், 'பாரத் ரத்னா' புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 107-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள், 19.1.2024 அன்று, வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புப் பேருரை ஆற்றுவார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 19.1.2024 அன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, 31.1.2024 - புதன் கிழமை அன்று, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில்,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் பங்கேற்று சிறப்புப் பேருரை ஆற்ற உள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.''












Click it and Unblock the Notifications