பாஜக பங்காளி ஆவதால்... திடீர் பயம்.. முதல்வரின் ஹஜ் கடிதத்தின் பின்னணி!
- கோயா
சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பதால் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெருமளவில் இழக்கும் அபாயத்தில் அதிமுக இருக்கிறது. இதனால் இஸ்லாமியர்களின் வாக்குகளை அதிரடியாக கவரும் வகையில் பல யோசனைகளை பாஜகவிடம் அதிமுக தரப்பு காதில் கிசுகிசுத்துள்ளதாம்.
இதில் ஒரு நடவடிக்கைதான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம். அதாவது இஸ்லாமியர்களின் புனித ஹஜ் யாத்திரைக்கு தமிழகத்திலிருந்து செல்வோரின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
இஸ்லாமியர்களின் மிக முக்கிய புனித பயணமாக இருப்பது ஹஜ் யாத்திரை. இந்தப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இஸ்லாமியர்கள் மத்தியில் வாழ்நாள் குறிக்கோளாக இருந்து வருகிறது. இந்நிலையில் 2019 ஆம் ஆண்டுக்கான ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கையை தமிழகத்திற்கு அதிகரித்து தருமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருக்கிறார்.

கூடுதல் இடங்கள்
இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள 3534 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதிக அளவில் விண்ணப்பங்கள் குவிந்துள்ளதால், தமிழகத்தில் இருந்து கூடுதலாக 1,500 பேருக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு கேட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

தேர்தல் நெருங்குவதால்
தற்போது தேர்தல் காலம் நெருங்கி விட்டதால் இந்த கடிதத்தின் பின்னணியிலும் தேர்தல் ஆதாயம் இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. அதாவது, மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதால் அதிமுகவுக்கு பெரியளவில் பின்னடைவு ஏற்படும் என சர்வேயில் தெரிய வந்ததாம்.

பாஜகவால் வந்த பயம்
பாஜகவை வளர்த்து விடுவதால் இஸ்லாமியர்களின் அதிருப்தியை சம்பாதித்த இ.பி.எஸ், ஹஜ் யாத்திரை விவகாரத்தை கையில் எடுத்து இஸ்லாமியர்களை ஐஸ் வைப்பதற்காக கடிதத்தை டெல்லிக்கு தட்டிவிட்டுள்ளார் என்று சொல்கிறார்கள்.

இன்னும் திட்டம் இருக்காம்
இஸ்லாமிய மக்களின் கோபத்தை தணித்து பாஜக அதிமுக கூட்டணிக்கு வாக்குகளை பெற இன்னும் பல யோசனை வைத்திருக்கிறாராம் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் தற்போதைய சூழலில் பாஜக மீது தமிழகத்தில் நிலவி வரும் அதிருப்தியைப் பார்த்தால் எத்தனை திட்டங்கள் போட்டாலும் அது பலன் தருமா என்பது சந்தேகம்தான் என்று சொல்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications