அடுத்த ஷாக்.. ஐஸ்வர்யாவை தொடர்ந்து நடிகர் ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா போலீசில் புகார்!என்னாச்சு?
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனது வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து சமீபத்தில் போலீசில் புகார் செய்தார். இந்நிலையில் இப்போது இளையமகள் சவுந்தர்யா போலீசில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் தற்போது போயஸ்கார்டனில் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் மார்ச் மாதம் தேனாம்பேட்டை போலீசில் பரபரப்பான புகார் அளித்தார். அதில் வீட்டின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் திருடு போனதாக தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய தேனாம்பேட்டை போலீசார் அவரது வீட்டு பணிப்பெண்ணை அதிரடியாக கைது செய்தனர். அதாவது பணிப்பெண் ஈஸ்வரி கடந்த சில ஆண்டுகளாக ஐஸ்வர்யாவின் வீட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகை, பணத்தை திருடியது தெரியவந்தது.
மேலும் அவர் நகைகளை விற்று கணவர் அங்கமுத்துவின் வங்கி கணக்கில் பணத்தை சேமித்ததும், அதன்பிறகு அந்த பணத்தை வைத்து சொத்துகள் வாங்கியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஈஸ்வரியை கைது செய்துள்ள போலீசார், நகைகளை மீட்கும் பணியை தொடங்கினர்.
இந்நிலையில் ஐஸ்வர்யாவை தொடர்ந்து நடிகர் ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா தேனாம்பேட்டை போலீசில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த மாதம் 24ம் தேதி போயஸ்கார்டன் இல்லத்தில் இருந்து ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு வேறு காரில் சென்றேன். இந்த வேளையில் எனது ரேஞ்ச் ரோவர் காரின் சாவியை உடன் வைத்திருந்தேன். அப்போது சாவி மாயமாகிவிட்டது என தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் போலீசார் புகாரை பெற்று கொண்டனர். இருப்பினும் வழக்குப்பதிவு செய்யவில்லை. பொதுவாக விலை உயர்ந்த கார்களின் சாவிகள் மாயமானால் அதனை எடுத்து சிலர் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் சிக்கல்கள் ஏற்படலாம். இந்நிலையில் தான் முன்னெச்சரிக்கையாக சவுந்தர்யா தேனாம்பேட்டை போலீசில் நேற்று இரவு புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பீகாரை போல்! தமிழக பெண்களுக்கும் ரூ. 10000! இன்று காலை ரிலீஸ் செய்ய இருந்தாரா ஸ்டாலின்? பிளான் என்ன? -
Heavy Rain: இன்னைக்கு நைட் புல்லா மழை வெளுக்க போகுது.. கோவை டூ குமரி வரை 22 மாவட்டங்களுக்கு அலர்ட் -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
ஸ்டாலினுக்கு 41.2% சதவீத மக்கள் ஆதரவு! மீண்டும் முதலமைச்சராக வருவார் என CNN கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
வாக்காளர்களிடையே நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தியதா.. விஜய்-சங்கீதா கேஸ்? CNN கருத்துக்கணிப்பில் ஷாக் -
கரூர் எஸ்.பியை மாற்ற வேண்டும் என அண்ணாமலை சொன்ன அடுத்த சில மணி நேரத்தில் தேர்தல் ஆணையம் போட்ட ஆர்டர் -
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் மாற்றம்! 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்தால் PAN தேவையா? -
"327 பார்வையாளர்கள் நியமனம்".. தமிழகத்தை கண்ட்ரோலில் எடுத்த தேர்தல் ஆணையம்.. அதிரடி அறிவிப்பு -
குடைச்சல் கொடுக்கும் கூட்டணி கட்சிகள்… திமுக முகாமில் கிளைமேக்ஸ் மாறுமோ? -
ரஜினி பற்றி வாயை விட்ட ஆதவ் அர்ஜுனா.. பாய்ந்து வந்த பாஜக! அப்போ கூட்டணி இல்லையா! -
சர்ச்சை ஓய்ந்தது.. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு! -
4 மாவட்ட எஸ்.பிக்கள் மாற்றம்.. தேர்தல் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையம் அதிரடி!












Click it and Unblock the Notifications