நெருங்கும் உலகக்கோப்பை.. உருவாகும் 'நம்பர் 4' பேட்டர் பிரச்சனை.. சூர்யகுமார் சொதப்ப காரணம் என்ன?
சூர்யகுமார் யாதவ் மீண்டும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சென்னை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 117 ரன்களுக்கு சுருண்டுள்ளது இந்திய அணி. அதிகபட்சமாக விராட் கோலி 31 ரன்களும், அக்சர் படேல் 29* ரன்களும் எடுத்துள்ளனர்.
இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் வழக்கம் போல் இடதுகை பந்துவீச்சாளரான மிட்சல் ஸ்டார்க்கிடம் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். முதல் 10 ஓவர்களுக்குள்ளாகவே 5 விக்கெட்டுகளை இழந்ததே காரணமாக உள்ளது.
அதில் மிக முக்கிய காரணம் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்தது தான். எப்படி மிட்சல் ஸ்டார் பந்தில் முதல் ஒருநாள் போட்டியில் ஆட்டமிழந்தாரோ, அதேபோல் மீண்டும் ஆட்டமிழந்துள்ளார். கிட்டத்தட்ட ரசிகர்களுக்கு ஆக்ஷன் - ரீப்ளே பார்ப்பதை போலவே இருந்தது. உலகக்கோப்பை நெருங்கி வரும் சூழலில், மீண்டும் 4ஆம் நிலையில் ஆடும் பேட்ஸ்மேனை கண்டறியாமல் இருப்பது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயர் காயம்
என்னதான் சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் ஜித்தனாக இருந்தாலும், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இதுவரை 20 போட்டிகளில் விளையாடி 2 அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவரது சராசரியும் 25.47 மட்டுமே உள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகியுள்ள சூழலில், சூர்யகுமார் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சூர்யகுமார் யாதவ் பேட்டிங்
ஒருவேளை உலகக்கோப்பைத் தொடரின் போதும் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகினால், அவரது இடத்தில் சூர்யகுமார் யாதவையே இந்திய அணி நம்பியுள்ளது. ஆனால் உலகக்கோப்பைத் தொடரில் இடம்பிடிப்பதற்காக எந்த தாக்கத்தையும் சூர்யகுமார் யாதவ் இதுவரை ஏற்படுத்தவில்லை. அதேபோல் சூர்யகுமார் யாதவின் பிரச்சனைகள் எதிரணிகளுக்கு தெரிய தொடங்கியுள்ளது.

இடதுகை பந்துவீச்சாளர்கள்
ஸ்விங் பந்துகளுக்கும் இடதுகை பந்துவீச்சாளர்களுக்கும் எதிராக சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதனால் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்ய வந்தால், உடனடியாக பந்துவீச்சை எதிரணிகள் மாற்றி வருவது கண்கூடாக பார்க்க முடிகிறது. மிட்சல் ஸ்டார்க், ஷாஹீன் அப்ரிடி, போல்ட் போன்ற பந்துவீச்சாளர்களால் சூர்யகுமாரை யாதவை எளிதாக வீழ்த்த முடியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பைத் தொடர்
இதிலிருந்து சூர்யகுமார் யாதவ் பாடம் கற்று சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஏனென்றால் கடந்த உலகக்கோப்பைத் தொடரில் நான்காவது நிலையில் ஆடும் பேட்ஸ்மேன் யார் என்பதில் கடைசி வரை முடிவு எடுக்காததால், உலகக்கோப்பையை தவற காரணமாக அமைந்தது. தற்போது இந்திய மண்ணில் நடக்கும் உலகக்கோப்பையையும் இந்தியா வெல்லவில்லை என்றால், அது இந்திய கிரிக்கெட்டுக்கு பேரிடியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications