வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை விவகாரம்... புதிதாக சர்ச்சை போஸ்டர்
சென்னை: கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி நெல்லையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
முத்துகுமாரசாமி தற்கொலைக்கு அப்போது வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி தான் காரணம் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதையடுத்து எதிர்க்கட்சிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக, அமைச்சரவையில் இருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஜெயலலிதா நீக்கினார். அதிமுக ஆட்சி நடந்த நிலையிலும், பாரபட்சமின்றி கைது, விசாரணை என அக்ரி கிருஷ்ணமூர்த்தி அலைக்கழிக்கப்பட்டார்.

இதனிடையே முத்துக்குமாரசாமி தற்கொலைக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், வழக்கறிஞர் பிரம்மா என்பவர் வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை விவகாரத்தை மையமாக வைத்து இப்போது புதிய போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார். அதில் முத்துகுமாரசாமி தற்கொலை செய்து 5 ஆண்டுகள் கடந்தும் ஐயமிக்கவர்கள் தண்டிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
முத்துகுமாரசாமி தற்கொலைக்கு காரணமான நபர்கள் மீது உச்சநீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த போஸ்டரில் கேட்டுள்ளார். இவர் முத்துகுமாரசாமிக்கு உறவினர் என்றும், ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது. மேலும், வழக்கறிஞர் பிரம்மா அகில இந்திய ராகுல்காந்தி ரத்ததான கழகம் என்ற பெயரில் அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த போஸ்டர் சர்ச்சையை எழுப்பியுள்ளதோடு சமூக வலைதளங்களில் அதிமுக மீதான விமர்சனங்களுக்கு காரணமாகவும் உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications