Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேளாண் பட்ஜெட் 2023..தமிழக சட்டசபையில் தாக்கல் செய்தார் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம்

தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்த வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

சட்டசபையில் இந்த ஆண்டிற்கான பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதனையடுத்து சட்டசபை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தை ஏப்ரல் 21ஆம் தேதி வரை நடத்த முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது.

Agriculture budget tabled in Tamil Nadu Assembly today what announcements will be released?

அதன்படி இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதற்கு முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார் எம்ஆர்கே பன்னீர் செல்வம்.

கூட்டங்களில் கலந்து கொள்ள இயலாத மக்களும் தங்களின் கருத்துக்களை உழவன் செயலியில் வேளாண் நிதிநிலை அறிக்கை எனும் பக்கத்திற்கு சென்று தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டது. கடிதம் மூலமும், [email protected] என்ற மின்னஞ்சல் மூலமும், 9363440360 என்ற வாட்ஸ் அப் எண் மூலம் கருத்துகளை விவசாயிகள் கூறியிருந்தனர். இன்று வேளாண்துறை அமைச்சர் தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட்டில் தங்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அவை நடவடிக்கைகளை நிறைவடையும். நாளை புதன்கிழமை தெலுங்கு வருட பிறப்பு என்பதால் சட்டசபைக்கு விடுமுறை. பட்ஜெட் மீது விவாதம் 23ஆம் தேதி மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு மற்றும் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. இதில் உறுப்பினர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.

24ஆம் தேதி 2-ம் நாள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். 25, 26ஆம் தேதிகளில் சட்டசபைக்கு விடுமுறை. 27ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதம் மீண்டும் நடைபெறும். 28ஆம் தேதி பட்ஜெட் மீது உறுப்பினர்கள் பேசிய விவாதத்திற்கு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதில் அளிக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+