நாளையோட கடைசி.. 4 சீட்தான்.. வந்தா வாங்க வராட்டி போங்க.. தேமுதிகவுக்கு அதிமுக கெடு?
தேமுதிகவுக்கு நாளை வரை கெடு விதித்துள்ளது அதிமுக தலைமை
Recommended Video

சென்னை: "இதுக்கு மேல முடியாது.. நாளைக்குதான் கடைசி... வந்தா வாங்க.. வராட்டி போங்க" என்ற ரீதியில் கூட்டணி சமாச்சாரத்தில் தேமுதிகவுக்கு அதிமுக கெடு விதித்துள்ளதாம்!
திமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு, தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர்கள் தேர்வு விவகாரத்தில் இறங்கி விட்டது.
கூட்டணிகளுக்கு 20 போக மிச்சமிருக்கும் 20 தொகுதிகளில் போட்டி என்றுகூட அக்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவித்து விட்டார்.

பாஜக ஆதரவு
ஆனால் அதிமுகவால் இன்னும் இத்தனை தொகுதிகளில் நாங்கள் போட்டியிட போகிறோம் என்று பகிரங்கப்படுத்த முடியாத நிலை உள்ளது. இதற்கு காரணம் தேமுதிகவின் இழுபறிதான்.. அதற்கு காரணம் பாஜகவின் சப்போர்ட்தான்!

கிடுக்கிப்பிடி
"2, 3 எல்லாம் தர மாட்டோம், அன்று சொன்னபடி 4 சீட்டுகள் தருகிறோம், வாங்கி கொள்ளுங்கள், தேர்தல் தேதியோ இன்று நாளை அறிவித்து விடுவார்கள். அதனால் இன்று நாளைக்குள் சட்டுபுட்டுனு ஒருமுடிவை எடுக்க பாருங்க. நாளை ஒருநாள் தான் உங்களுக்கு டைம். அதற்கு மேல் எங்களால் காத்திருக்க முடியாது" என்று அதிமுக கிடுக்கிப்பிடி கண்டிஷன் போட்டுள்ளதாம்.

என்ன முடிவு?
இப்படி கெடு வைத்துவிட்டதால் தேமுதிக மீண்டும் டென்ஷனில் விழுந்துள்ளது. அந்த கட்சியில் இன்னும் யாருமே நார்மலாகவில்லை. கொதிப்பு, ஆத்திரம், விரக்தி, சோகம், ஆற்றாமை, தவிப்பு என்று எல்லா உணர்வுகளும் கலந்து தவித்து வருகிறார்கள். இதில் இன்று கூடி என்ன முடிவு எடுப்பார்களோ தெரியாது.

சின்னம் கிடைக்குமா?
ஒருவேளை தரப்போகும் 4 சீட் வாங்கி கொள்வதாக வைத்து கொண்டாலும் தேமுதிக சில சிக்கல்களை பற்றி யோசிக்க வேண்டியிருக்கும், முதல் பிரச்சனை, எந்த தொகுதிகள் அவை என்பதாக இருக்கும் என்பதுதான். இரண்டாவது பிரச்சனை "மேற்படி" விஷயங்களுக்கு ஒத்து வருவார்களா? என்பது. மூன்றாவது பிரச்சனை முரசு கிடைக்குமா? அல்லது இரட்டை இலையா? என்பது.

பாமக ஆதரவு
நான்காவது பிரச்சனை, இவ்வளவு அமர்க்களங்களும் நடந்து அதிமுகவுக்கு மீண்டும் சென்றால் மரியாதை கிடைக்குமா? என்பது. ஐந்தாவது பிரச்சனை, வடமாவட்டங்களில் பாமகவின் ஆதரவு எந்த அளவுக்கு கிடைக்கும் என்பதுதான்!

நாளைதான் கடைசி
இதையெல்லாம் ஒருநாளுக்குள் யோசித்து தேமுதிக முடிவு சொல்லுமா என தெரியாது. அதனால் தேமுதிக தன் நிலைப்பாட்டை அறிவிக்கிறதோ இல்லையோ அதிமுக நாளைக்கு தன் முடிவை சொல்லிவிட்டு அடுத்து வேலையை பார்க்க போய்விடும் என்று மட்டும் தெரிகிறது! ஒருநாள்தானே... பார்ப்போம் தேமுதிக எடுக்க போகும் அதிரடியை!!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications