அதிமுக பொதுக்குழு கூட்டம் எப்போது?.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
சென்னை: அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை, வானகரத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கழக அவைத் தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது. கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில், அதிமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள், கட்சி வளா்ச்சிப் பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.











Click it and Unblock the Notifications