அதிமுக பொன் விழாவையொட்டி மாநாடு நடத்துவோம்... மூத்த நிர்வாகிகள் முன் வைத்த கோரிக்கை..!
சென்னை: அதிமுக பொன் விழாவையொட்டி மாநாடு நடத்த வேண்டும் என இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
மேலும், பொன் விழா ஆண்டான 2021 அக்.17 முதல் -2022 அக்.16 வரை, அடுத்த ஓராண்டுக்கு கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளை அதிகளவில் நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.
மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களின் கருத்தை கேட்டுக்கொண்ட ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ்.ஆகிய இருவரும் விரைவில் இது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளனர்.

ஆலோசனைக் கூட்டம்
அதிமுக பொன்விழாவை எவ்வாறு கொண்டாடுவது, என்னென்ன மாதிரி கட்சி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது என்பது குறித்தெல்லாம் அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று காலை விரிவாக ஆலோசிக்கப்படிருக்கிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுக பொன்விழா மாநாடு குறித்து பேசப்பட்டிருக்கிறது.

கட்சி நிகழ்ச்சிகள்
இதேபோல் அடுத்த வரும் ஓராண்டு முழுவதும் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி அதிமுகவின் கொடியை பறக்க விட வேண்டும் எனப் பேசப்பட்டிருக்கிறது. அநேகமாக வரும் பிப்ரவரி மாதம் ஜெயலலிதா பிறந்தநாள் வருவதால், அப்போது அதிமுக பொன்விழா மாநாடு நடைபெற அதிக வாய்ப்புள்ளது. முன்னதாக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகியோர், தனித்தனியாக காரை விட்டு இறங்கியதும் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மரியாதை செலுத்திவிட்டு அலுவலகத்துக்குள் நுழைந்தனர்.

உற்சாக வரவேற்பு
இதனிடையே எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பில் குறையேதும் இருந்ததாக தெரியவில்லை. பூங்கொத்துக்களை அவரிடம் கொடுப்பதற்காக நிர்வாகிகள் முட்டி மோதி நின்றதை காண முடிந்தது. அதேவேளையில் ஓ.பி.எஸ். வருகை தந்த போது, அந்தளவுக்கு வரவேற்பு கொடுக்கப்படாதது கவனிக்கத்தக்கது. கூட்ட அரங்கத்திற்குள்ளும் ஓ.பி.எஸ். -இ.பி.எஸ். இடையே பெரியளவில் நெருக்கம் இருந்ததாக தெரியவில்லை.

இளைஞர்கள்
அதிமுகவின் சீனியரும், கட்சியில் அதிகாரமிக்கவருமான தங்கமணியிடம் இளைஞர் கூட்டத்தினர் கட்சிப் பதவி தொடர்பான கோரிக்கைகள் முன் வைத்ததையும் அங்கு காண முடிந்தது. இதனிடையே அதிமுக பொன்விழா ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ப.வளர்மதியிடம் நாம் பேசிய போது, ''ஆலோசனைக் கூட்டம் தொடர்பான முடிவுகளை கட்சி தலைமை முறைப்படி அறிவிக்கும்'' என முடித்துக்கொண்டார்.
-
Sellur Raju: பாஜகவுடன்தானே? பாகிஸ்தானுடனா கூட்டணி வைத்தோம்? ஆவேசமான செல்லூர் ராஜு! -
“எடப்பாடி பழனிசாமி இரட்டை விரலை காட்டுவது ஏன் தெரியுமா?” - உதயநிதி ஸ்டாலின் சொன்ன மேட்டர்! -
விசிக வேட்பாளர்களுக்கு 3 தொகுதிகளில் வாக்களிக்க வேண்டாம்.. திருமாவளவனே சொன்ன வார்த்தை.. பின்னணி -
“படத்தில் விஜயகாந்துக்கு வாக்கு கேட்டேன்.. இன்று அவரது மகனுக்கு ஓட்டு கேட்கிறேன்" - ஸ்டாலின் பேச்சு -
தாம்பரம் ட்விஸ்ட்.. ஸ்டாலின் போட்ட ‘மாஸ்டர் பிளான்’.. எதிர்ப்பை ஆதரவாக்கிய திமுகவின் தேர்தல் வித்தை! -
மேலூரில் மீண்டும் இறங்கும் மாணிக்கம் தாகூர் மாமனார்? சீட்டை பெற போராடும் கதர்கள்.. என்ன நடக்கிறது? -
“நான் பேசியதாக பரப்பப்பட்ட ஆடியோ AI மூலம் பொய்யாக உருவாக்கப்பட்டது” - ஆ.ராசா விளக்கம்! -
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சாதி பெயர் இருந்தது தட்டச்சு பிழை - சிங்காநல்லூர் ஸ்ரீநிதி விளக்கம்! -
“வீட்டுச் சிறையில் கருணாநிதி? அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரித்து தண்டனை கொடுப்போம்”- எடப்பாடி பேச்சு -
திருமாவுக்கு பதில் மாஜி காங். தலைவரின் மகன் போட்டி.. காட்டுமன்னார் கோவில் வேட்பாளர் ஜோதிமணி யார்? -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல்












Click it and Unblock the Notifications