Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரூருக்கு மகிழ்ச்சி.. திண்டுக்கல் குஷி.. எடப்பாடி பழனிசாமி ரெடியாயிட்டாரு.. பரபர சென்னை ராயப்பேட்டை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் நெருங்கி வரும்நிலையில், விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணலை அதிமுக தொடங்கி உள்ளன.. அந்தவகையில், கட்சிக்குள் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது.

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுள்ளது.. எனவே, எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் நேர்காணலை துவங்கி உள்ளார்.

AIADMK interview for 20 constituencies today including Dindigul Karur by Edappadi Palanisamy in Chennai Royapettah

மெகா கூட்டணி : ஆனால், மெகா கூட்டணியை எடப்பாடி பழனிசாமி உருவாக்க போவதாக கூறி 2 வருட காலமாகியும், இதுவரை திணறி வருவதாகவே தெரிகிறது. இப்போதைக்கு அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம், புதிய தமிழகம், எஸ்டிபிஐ, பார்வர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்டவை இணைந்துள்ளன. தேமுதிக, பாமகவுடன் அதிமுக பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தி வருகிறது.

மற்றொருபக்கம், அதிமுக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு தாக்கல் கடந்த மார்ச் 1 ஆரம்பித்து நடந்து முடிந்தது. கடந்த 7ம் தேதியுடன் விருப்பமனு அளிக்கும் காலம் நிறைவடைந்த நிலையில், மொத்தமாக 2,475 பேர் விருப்ப மனுக்களை சமர்ப்பித்திருந்தனர்.

அறிவிப்பு: இதையடுத்து இவர்களுக்கான நேர்காணல் நேற்றும், இன்றும் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்றைய தினம் காலை திருவள்ளூர், சென்னை, வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 10 தொகுதிகளுக்கும், பிற்பகலில் திருவண்ணாமலை, ஆரணி, கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெற்றது.

சேலத்தில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்.. திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்றைய தினமும் நேர்காணல் நடத்துகிறார். அதன்படி, இன்று 11ம் தேதி பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், புதுச்சேரி உள்ளிட்ட 20 தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம், காலை, மாலை நேர்காணல் நடத்தப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.

விருப்பமனு: விருப்பமனு பெற்றதற்கான அசல் கட்டண ரசீதுடன் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 20 தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள 20 தொகுதிகளுக்கு இன்று நேர்காணல் நடைபெறுவதால், அதிமுக தரப்பே படுபிஸியாக காணப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+