புயல் நிவாரண பணியில் ஈடுபட்ட பெண் வி.ஏ.ஓ மீது பலாத்கார முயற்சி.. அதிமுக செயலாளர் மீது திடுக் புகார்
சென்னை: நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) செல்வி மீது கீழ்வேளூர் ஒன்றிய அதிமுக செயலாளர் தாக்குதல் நடத்தி பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தச் சம்பவம் காரணமாக, நிவாரணப் பணிகள் பல மணி நேரம் அங்கு முடங்கியிருந்தது. இதுகுறித்து வட்டாட்சியர் வரை புகார் போயுள்ளது. இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்ட ஒரு அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார். வட்டாட்சியர் வரை இந்தப் புகாரை தெரிவித்தும், ஆளுங்கட்சி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க மேலிடம் அனுமதிக்காததால், அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
புயல் பாதித்த பகுதிகளிலும் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ள நிலையில், மக்களின் உயிருடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் அதிமுக ஆட்சியாளர்கள். மக்களின் கோபம் புயலைவிடச் சீற்றமாக உள்ளதை நேரில் காண்கிறேன். குவிந்த கைகளும் கோரிக்கை மனுக்களுமாகக் கண்ணீர் வழியக் கதறுகிறார்கள், என்று தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications