பாஜகவிடம் அதிமுகவை அடகு வைத்ததாக புலம்பும் எம்எல்ஏக்கள்.. ஆனால் குரல் கொடுக்க தயக்கம்.. ரத்தினசபாபதி
Recommended Video
சென்னை: அதிமுக, பாஜகவின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. இது பெரும்பாலான எம்எல்ஏக்களுக்கு பிடிக்கவில்லை என அதிமுகவின் அதிருப்தி எம்எல்ஏ ரத்தினசபாபதி கூறியுள்ளார்.
தமிழக சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் இருப்பதால், தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என, இரு அதிருப்தி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அளித்த நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இது குறித்து சென்னையில் உள்ள எம்.எல்.ஏ விடுதியில் எம்.எல்.ஏக்கள் இரத்தினசபாபதி மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
ரத்தினசபாபதி கூறுகையில் ஜெ வின் உண்மையான தொண்டர்கள் நாங்கள். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நிறைய மாற்றங்கள் கட்சிக்குள் ஏற்பட்டன.
ஜெயலலிதாவுக்கு பின் ஆட்சியை எப்படி தொடர வைப்பது என யோசனை சொன்னதால் தான் எங்களுக்கு இந்த நிலை. ஆனால் கட்சியை எதிர்த்த ஓபிஎஸுக்கும் துணை முதல்வர் பதவி, மற்றவர்களுக்கு அமைச்சர் பதவி எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளது.
கட்சியை காப்பாற்ற முயன்ற எங்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ். அதை நீதி தேவதை தடுத்துள்ளது. பாஜகவின் முழு கட்டுப்பாட்டில் தான் அதிமுக இருக்கிறது. இது பெரும்பாலான எம்.எல்.ஏக்களுக்கு பிடிக்கவில்லை. அதிமுகவை அடகு வைத்ததாக மற்ற எம்எல்ஏக்கள் சங்கடப்படுகின்றனர்.
தனிமையில் பேசும் போது வருத்தப்படுகிறார்களே தவிர, கூட்டாக குரல் கொடுக்க தயங்குகின்றனர் .
எம்.எல்.ஏ பிரபுவின் நிலைபாடு குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றார். உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து கலைச்செல்வன் பேட்டி கூறுகையில் ஜெயலலிதா யாரை விரும்பினார்கள் என மக்களுக்கு தெரியும். ராஜேந்திரனுக்கு 6-வது இடம் கொடுக்கப்பட்டது. சபாநாயகர் மாண்பை மீறி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆட்சியை கலைக்க நினைத்தவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவிற்கு சம்பந்தம் இல்லாத மாபா. பாண்டியராஜனுக்குக் கூட உயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன என குற்றம் சாட்டினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications