Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீபாவளி பட்டாசால் காற்று மாசு.. சென்னையில் 3 இடங்களில் அதிக பாதிப்பு பதிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பட்டாசு வெடித்ததன் காரணமாக, 3 இடங்களில் காற்று மாசு அபாயகரமான அளவை எட்டியுள்ளது. நேற்று 4 இடங்களில் காற்று மாசு அபாயகரமான அளவை எட்டியிருந்த நிலையில் இன்று மாசு சற்று குறைந்திருக்கிறது.

இந்து மக்களின் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக பட்டாசுகள் வெடித்திருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் காற்று மாசும் அதிகரித்து வருகிறது. எனவே, பசுமை பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும் என்றும், பட்டாசு வெடிக்கும் நேரத்தை குறைக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

air pollution chennai diwali 2024 2024

ஏற்கெனவே அரசு தரப்பில், பட்டாசுகளை வெடிப்பதற்கான நேரமும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், நேரக்கட்டுப்பாட்டு இல்லாமல் சிலர் பட்டாசுகளை வெடித்து வருகின்றனர். இதனால் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு சென்னையில் காற்றின் தரம் மிக மோசனமான அளவில் பதிவாகியிருந்தது. 2022 தீபாவளி அன்று மட்டும் சென்னைவாசிகள் சுமார் 32 சிகரெட்டுகளை புகைக்கும் அளவுக்கு காற்று மாசடைந்திருந்தது. காற்று மாசை அளவிட AQI பயன்படுத்துவார்கள். இந்த அளவீட்டின்படி காற்று மாசு 200ஐ கடந்துவிட்டால், அது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் என்று அர்த்தம். 2022 தீபாவளியன்று சென்னையில் பல இடங்களில் காற்று மாசு 700ஐ கடந்திருந்தது.

air pollution chennai diwali 2024 2024

பொதுவாகவே காற்றில் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள், சல்பர் ஆக்சைடுகள், ஹைட்ரோ கார்பன் நுண்துகள்கள் இருக்கும். ஆனால், பட்டாசு வெடிக்கும் பொழுது நுண் துகள்களுடன் ஆர்செனிக், லித்தியம், காட்மியம், ஆன்ட்டிமோனி, பாதரசம் போன்ற கன உலோகங்களின் நச்சுக்களும், பேரியம், பொட்டாசியம், கந்தகம், நைட்ரேட், நைட்ரிக் ஆக்சைடு, நைட்ரஜன் டைஆக்சைடு, ஸ்ட்ரோடியம், , க்ளோரைடு, ஓசோன், பெர்க்ளோரைடு, அலுமினியம், தாமிரம் போன்ற உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பல்வேறு நச்சு சேர்மங்களும் வெளியேறுகின்றன.

நேற்றும் இதேதான் நடந்து வருகிறது. சென்னையில் நேற்று மதியம் நிலவரப்படி 4 இடங்களில் காற்று மாசு 200ஐ கடந்திருக்கிறது. குறிப்பாக ஆலந்தூரில் 257ஆக காற்று மாசு பதிவாகியிருந்தது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 3 இடங்களில் காற்று மாசு அபாய கட்டத்தை தாண்டி இருக்கிறது. அதாவது, சென்னை பெருங்குடியில் காற்றின் தரக்குறியீடு 237 ஆகவும், வேளச்சேரி - 219, ஆலந்தூர் - 211 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+