திடீரென முடங்கிய ஏர்டெல் - ஜியோ.. கால் & நெட் பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதி! எப்போது சரியாகும்?
சென்னை: நாடு முழுக்க ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ நெட்வொர்க் முடங்கியுள்ளது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் மக்கள் போன் கால் மற்றும் டேட்டா யூஸ் செய்ய முடியாமல் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். தனது நெட்வொர்க்கில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள ஏர்டெல், அதை சரி செய்யத் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
நம் நாட்டின் பல பகுதிகளில் ஏர்டெல் சேவை முடங்கியதாக வாடிக்கையாளர்கள் புகாரளித்துள்ளனர். ஏர்டெல் வாடிக்கையாளர்களால் பல இடங்களில் இணையச் சேவையைப் பயன்படுத்த முடியவில்லை. சிலரால் கால் கூட செய்ய முடியவில்லை என புகாரளித்துள்ளனர்.

ஏர்டெல் நெட்வொர்க்கில் திடீரென ஏற்பட்ட இந்தச் சிக்கலால் மொபைல் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் யூஸ் செய்ய முடியாமல் மக்கள் சிரமத்தை எதிர்கொண்டனர். நாடு முழுக்க பலரும் பரவலாக இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் டெல்லி- என்சிஆர் பகுதியிலேயே பாதிப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
மாலை 4:30 மணி நிலவரப்படி, சுமார் 3500க்கும் மேற்பட்டோர் டவுன்டிடெக்டர் (Downdetector) தளத்தில் ஏர்டெல் சேவை முடங்கியுள்ளதாகப் பதிவு செய்துள்ளனர். இந்தியா முழுவதும் மொபைல் டேட்டா மற்றும் குரல் இணைப்பு ஆகிய இரண்டையும் பாதித்துள்ளது. சுமார் 71% யூசர்கள் தங்களால் கால் செய்ய முடியவில்லை என கூறியுள்ளனர். 14% பேர் தங்களால் இணையத்தை யூஸ் செய்ய முடியவில்லை என புகாரளித்துள்ளனர். அதேபோல இன்னும் 15% பேர் தங்களது ஏர்டெல் சிம்மில் சிக்னல் எதுவும் வரவில்லை என கூறியுள்ளனர்.
ஏர்டெல் நிறுவனமும் தனது நெட்வொர்க்கில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதை உறுதி செய்திருக்கிறது. இது தொடர்பாக ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நாங்கள் தற்போது ஒரு நெட்வொர்க் அவுட்டேஜ்ஜை எதிர்கொண்டு வருகிறோம். எங்கள் குழு பிரச்சினையைத் தீர்க்கவும், சேவைகளை உடனடியாக மீட்டெடுக்கவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்று தெரிவித்தது.
யூசர்கள் ஏர்டெல் மீது கடந்த சில காலமாகவே தொடர்ச்சியாகப் பல்வேறு புகார்களை முன்வைத்து வருகிறார்கள். குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளில் நீண்ட காலமாகவே பிரச்சினை இருப்பதாகப் புகாரளித்தனர். மேலும், சிலர் 5G திட்டங்களில் ரீசார்ஜ் செய்தபோதிலும், 4ஜி டேட்டா யூஸ் செய்யும்போது கூடுதலாகப் பணம் பிடிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அதேபோல் ஏர்டெல் நெட்வொர்க்கை தொடர்ந்து ஜியோ மற்றுமு் விஐ நெட்வொர்க்கும் முடங்கி உள்ளது. இதனால் அந்த வாடிக்கையாளர்களும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications