சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம்.. முன்னாள் அதிமுக கவுன்சிலருக்கு அக்.11 வரை சிறை
Recommended Video
சென்னை: பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக பிரமுகர் ஜெயகோபாலை வரும் அக்டோபர் 11-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் சுபஸ்ரீ (23). இவர் பிடெக் படித்துவிட்டு கனடா நாட்டில் மேற்படிப்பு படிக்க விரும்பினார். இதனால் அவர் நுழைவுத் தேர்வு எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருந்தார். மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி பணியை முடித்துக் கொண்டு பள்ளிக்கரணை வழியாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது பேனர் சரிந்து விழுந்தது.
அப்போது அவ்வழியாக வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் அவர் பலியானார். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை அரசியல் கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் கடுமையாக கண்டித்தனர்.

எதிர்ப்பு
இதையடுத்து லாரி ஓட்டுநரும், பேனரை அச்சடித்தவரும் கைது செய்யப்பட்டனர். ஆனால் பேனர் நபர் அதிமுக நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலருமான ஜெயகோபாலை கைது செய்யாததற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன.

தேனிகனிக்கோட்டையில் கைது
இந்த நிலையில் இந்த பேனர் வைத்த அதிமுக நிர்வாகி ஜெயகோபாலை போலீஸார் கைது செய்ய வருவதை அறிந்து அவர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து தப்பிய அவர் தேன்கனிக்கோட்டையில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்.

சிறை தண்டனை
அப்போது பேனர் வைத்தது தவறுதான் என நீதிமன்றத்தில் ஜெயகோபால் ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஜெயகோபாலை வரும் அக்டோபர் 11-ஆம் தேதி வரை அதாவது 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி ஸ்டார்லி உத்தரவிட்டார்.

4 பேர் கைது
இந்த விவகாரத்தில் பேனரை வைத்த பணியில் ஈடுபட்ட பழனி (50), சுப்பிரமணி (50), லட்சுமிகாந்தன் (38) மற்றும் சங்கர் (35) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 4 பேரும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
-
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன?












Click it and Unblock the Notifications