சென்னை முதலைப் பண்ணையிலிருந்து மாயமான உலகின் மிகப் பெரிய ஆமை
சென்னை: உலகின் இரண்டாவது பெரிய ஆமை இனமான அல்தாப்ரா ஆமை இனத்தைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க ஆமை மகாபலிபுர முதலை பண்ணையிலிருந்து மாயமாகியுள்ளது.
சென்னையை அடுத்துள்ள மகாபலிபுரத்தில் முதலை பண்ணை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு வகையான ஆமைகள் மற்றும் முதலைகள் உட்பட நூற்றுக்கணக்கான ஊர்வன வகைகள் உள்ளன.
இந்நிலையில் தற்போது இந்த முதலை பண்ணையிலிருந்து 55 வயது மதிக்கத்தக்க ஆமை திருட்டுப் போகியுள்ளது. சுமார் ஆறு வாரங்களுக்கு முன்பே இந்த திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. இருப்பினும், இப்போது தான் இது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.10 லட்சம் மதிப்பிலான ஆமை
திருட்டுப்போகியுள்ள இந்த ஆமை உலகின் இரண்டாவது பெரிய ஆமை இனமான அல்தாப்ரா ஆமை இனத்தைச் சேர்ந்தது ஆகும். சர்வதேச கள்ளச் சந்தையில் இந்த ஆமையின் மதிப்பு 10 லட்ச ரூபாய் இருக்கும்.

நள்ளிரவு திருடப்பட்ட ஆமை
இந்தச் சம்பவம் குறித்துக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து காவல்துறை ஆய்வாளர் வேல்முருகன் கூறுகையில், "இந்தத் திருட்டு சம்பவம் நவம்பர் 11ஆம் தேதி நள்ளிரவு நடந்திருக்கலாம். அவர்கள் அருகிலுள்ள எந்த கண்காணிப்பு கேமராவிலும் சிக்காமல் இந்த திருட்டு சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர். இந்தத் திருட்டில் ஈடுபட்டவர்கள் மிகவும் கவனமாக இருந்துள்ளனர்" என்றார்.

ஊழியர்களுக்கு தொடர்பு
விசாரணை அதிகாரி இ.சுந்தரவத்தனம் கூறுகையில், "மிகப் பெரிய ஆமை இருந்த இடத்திற்கு அருகில் சி.சி.டி.வி கேமராக்கள் எதுவும் இல்லை. ஆனால் நள்ளிரவில் இந்தப் பண்ணைக்கு வெளியே சிலரது நடமாட்டங்கள் இருந்துள்ளன. மேலும், கிழக்கு கடற்கரை சாலை வழியாகத் திருடர்கள் ஆமையுடன் தப்பியுள்ளனர் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.

ஆமையின் உடலில் மருத்துவ நலன்கள்
இந்தத் திருட்டு சம்பவத்தில் பண்ணையில் இருக்கும் ஊழியர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அதனடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆமையின் உடல் பாகங்களில் மருத்துவ நலன்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. அதற்காக இந்த ஆமை திருடப்பட்டிருக்கலாம்." என்றார்.

காணாமல்போன 55 வயது மதிக்கத்தக்க ஆமை
தற்போது காணாமல் போகியுள்ள ஆல்டாப்ரா ஆமை 150 ஆண்டுகள் வரை உயிர் வாழும். 1.5 மீட்டர் நீளத்திற்கு வளரக்கூடிய இந்த ஆமை 200 கிலோ வரை எடை இருக்கும். சென்னை முதலை பண்ணையிலிருந்த இந்த இனத்தைச் சேர்ந்த நான்கு ஆமைகள் இருந்துள்ள. அவற்றில் 55 வயது மதிக்கத்தக்க ஆமை ஒன்று தற்போது திருடப்பட்டுள்ளது. இந்த திருட்டுச் சம்பவம் குறித்து முதலை பண்ணை இயக்குநர் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications