Mass Layoffs: 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் ‛அமேசான்' நிறுவனம்.. கலக்கத்தில் பணியாளர்கள்
சென்னை: ஐடி உள்பட பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும் ‛அமேசான்' நிறுவனம் அடுத்த வாரம் முதல் 16 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. மொத்தம் 30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக அமேசான் இந்த நடவடிக்கையை எடுப்பதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு ஏராளமான ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. மைக்ரோசாப்ட், டிசிஎஸ், காக்னிசண்ட் உள்பட இன்னும் பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது. இந்த லிஸ்ட்டில் அமேசான் நிறுவனமும் இணைந்தது.

உலகில் பிரபலமான நிறுவனங்களில் ஒன்று அமேசான். ஆன்லைன் வர்த்தகம், கிளவுட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங், ஏஐ உள்பட பல்வேறு சேவைகளை அமேசான் வழங்கி வருகிறது. அமேசான் நிறுவனம் ஏஐ, ரோபாக்களை பணிக்கு பயன்படுத்துவதை அதிகரித்து வருகிறது.
30 ஆயிரம் பேர் டார்க்கெட்
இந்நிலையில் தான் 30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக கடந்த ஆண்டு அறிவித்தது. அதன்படி முதற்கட்டமாக உலகம் முழுவதும் கடந்த ஆண்டு அக்டோபர் 28 ம் தேதி முதல் 14 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை தொடங்கியது. அனைவருக்கும் இ-மெயில், போன்கால் மற்றும் செல்போன் மெசேஜ் வழியாக பணி நீக்கம் குறித்த அறிவிப்புகள் அனுப்பி வைக்கப்பட்டது.
2வது கட்டமாக 16 ஆயிரம் பேர்
இதன் அடுத்தக்கட்டமாக 16 ஆயிரம் ஊழியர்களை அமேசான் நிறுவனம் பணி நீக்கம் செய்ய உள்ளது. இந்த நடவடிக்கையை அடுத்த வாரம் முதல் அமேசான் நிறுவனம் தொடங்க உள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ஜனவரி 27 முதல் பணி நீக்கம்
அதன்படி ஜனவரி 27 ம் தேதி முதல் 2வது கட்டமாக 16 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கும் நடவடிக்கையை அமேசான் தொடங்க உள்ளது. அமேசானின் தற்போதைய பணி நீக்கத்துக்கும் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக பலரும் பிளைண்ட் மற்றும் ரெடிட் வலைதளங்களில் பதிவுகள் செய்து வருகின்றனர்.
சூசகமாக தெரிவித்த மேனேஜர்கள்
மேலும், பலரும் ஜனவரி 27 ம் தேதி நடக்கும் பெரிய அளவிலான பணி நீக்கம் குறித்து அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளனர். அதன்படி, அமேசான் ஊழியர்கள் என்று கூறும் பலரும் தங்களின் மேனேஜர்கள் உள்பட பலரும் சூசகமாக தெரிவித்துள்ளதாக கூறி புலம்பி வருகின்றனர்.
கடந்த அக்டோபர் மாதம் அமேசான் நிறுவனம் 14 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இப்போது மீண்டும் 16 ஆயிரம் பேரை நீக்கும் பட்சத்தில் மொத்த பணி நீக்கம் 30 ஆயிரமாக அதிகரிக்கும்.
இது சாத்தியமாகும் பட்சத்தில் கடந்த 2023ம் ஆண்டை ஒப்பிடும்போது மிகவும் அதிகமாகும். ஏனென்றால் கடந்த 2023ம் ஆண்டில் 27 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications