Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமித் ஷா வருகை எதிரொலி.. இன்று தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை! ரோந்து பணிகள் தீவிரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா வருகையை முன்னிட்டு இன்று தனுஷ்கோடிக்குச் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இப்போது இரண்டு நாள் பயணமாகத் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். நேற்றைய தினம் அமித் ஷா ராமேஸ்வரத்தில் அண்ணாமலையில் பாத யாத்திரையைத் தொடங்கிவைத்தார்.

அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், அதைக் கருத்தில் கொண்டு "என் மண், என் மக்கள்" என்ற தலைப்பில் அண்ணாமலை இந்த பாத யாத்திரையை நடத்துகிறார். இந்த மாத யாத்திரை பல கட்டங்களாக 6 மாதங்களுக்கு நடக்கிறது.

 Amid Amit Shahs visit, tourists banned to Dhanushkodi till 2 pm

இந்த பாத யாத்திரையைத் தான் அமித் ஷா நேரில் வந்து தொடங்கி வைத்தார். இதற்காக நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, திமுகவை மிக கடுமையாக விமர்சித்துப் பேசினார். நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசு திமுக அரசு தான் என்று சாடிய அவர், ஊழல் குற்றச்சாட்டில் கைதாகியுள்ள செந்தில் பாலாஜியை ஏன் அமைச்சரவையில் விட்டு நீக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்காக இரண்டு நாள் பயணமாக ராமேஸ்வரம் வந்துள்ள அமித் ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். நேற்றிரவு அங்குள்ள ஹோட்டலில் தங்கிய இன்று அதிகாலை ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயில் சுவாமி தரிசனம் செய்தார்.

அமித் ஷா வருகையை முன்னிட்டு அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே அமித் ஷா வருகையை முன்னிட்டு தனுஷ்கோடிக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணி வரை சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அமித் ஷா வருகையையொட்டி பாக் ஜலந்த், மன்னார் வளைகுடா பகுதிகளில் கடலோர காவல் படை ரோந்து பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இன்று அதிகாலையில் சுவாமி தரிசனத்தை முடித்த அமித் ஷா காலை 10.30 மணியளவில் அங்குள்ள பாஜக நிர்வாகி ஒருவர் வீட்டிற்குச் செல்கிறார். தொடர்ந்து காலை 11 மணிக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் காலம் குறித்த புத்தகத்தை வெளியிடும் அவர், பிற்பகல் 12.05 மணிக்கு பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் அருங்காட்சியகத்தைப் பார்வையிடுகிறார்.

பின்னர், பிற்பகல் 12.40 மணிக்கு விவேகானந்தர் நினைவு இல்லத்துக்குச் செல்லும் அவர், பிற்பகல் 1.20 மணிக்கு மண்டபம் பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்கிறார். அங்கிருந்து தனி விமானம் மூலம் பிற்பகல் 2 மணிக்கு டெல்லிக்கு புறப்படுகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+