நெருங்கிட்டாங்களே? மாயமான நீர்மூழ்கி கப்பல்! கடலுக்கடியில் கிடைத்த முக்கிய தடயம்! தீவிரமாகும் தேடல்
சென்னை: மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை பார்க்க 5 கோடீஸ்வரர்களுடன் சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் மாயமாகி 4 நாட்கள் ஆன நிலையில் இன்னும் அதுபற்றிய எந்த தகவலும் வெளியாகல் இருந்தது. இந்நிலையில் தான் கடலுக்கடியில் முக்கிய தடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
1912 காலக்கட்டத்தில் உலகின் மிகப்பெரிய நீராவி என்ஜின் கப்பலாக டைட்டானிக் இருந்தது. இது அந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் டிரான்ஸ் அட்லாண்டிக் பயணத்தின்போது பனிப்பாறை மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில் 1500க்கும் அதிகமானவர்கள் இறந்தனர். இந்த டைட்டானிக் கப்பலின் பாகங்கள் கனடாவின் நியூ பவுண்ட்லாந்திலிருந்து 400 மைல் தொலைவில் கடலுக்கடியில் உள்ளது.
இந்த டைட்டானிக் பாகங்களை பார்க்க ‛தி ஓசன் கேட்' என்ற நிறுவனத்தின் ‛டைட்டன்' நீர்மூழ்கி கப்பலில் 5 கோடீஸ்வரர்கள் கடலுக்கடியில் சென்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்கள் சென்ற நிலையில் நீர்மூழ்கி கப்பல் அடுத்த 2 மணிநேரத்தில் தொலை தொடர்பை இழந்தது.

இதனால் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த பிரிட்டன் தொழிலதிபர்களான ஹமிஷ் ஹார்டிங் (வயது 58), ஷாஜதா தாவூத் (48) அவரது மகன் சுலைமான் (19), பிரஞ்ச் ஆய்வாளர் பால் ஹென்றாி நர்கோலெட் (77) உள்பட 5 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. மீட்பு பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீர்மூழ்கி கப்பலில் இருந்த ஆக்சிஜன் அளவு இன்றோடு காலியாகிவிட்டது. இருப்பினும் நீர்மூழ்கி கப்பல் மட்டும் இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.
இருப்பினும் தொடர்ந்து அமெரிக்க கடலோர காவல் படை மீட்பு பணியை மேற்கொண்டு வருகிறது. டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் இருந்து எந்த சிக்னலும் கிடைக்காததால் மீட்பு பணி மிகவும் சவாலாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தான் சோனார் மற்றும் ரிமோட் வகையிலான கருவிகள் மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தான் தற்போது முக்கிய தடயம் கிடைத்துள்ளது. அதாவது ரிமோட் தொழில்நுட்பத்தினம் மூலம் ஆர்ஓவி தேடும் பணியில் தான் முக்கிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி கடலுக்கடியில் டைட்டானிக் கப்பலின் அருகே குப்பைகள் குவிந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கப்பலின் சிதைந்த பாகங்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனை அமெரிக்க கடலோர காவல்படையினர் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து அவர்கள், ‛‛டைட்டானிக் கப்பலை பார்க்க சென்று மாயமான நீர்மூழ்கி கப்பலை ஆர்ஓவி மூலம் தேடும் பணி தொடங்கியது. அப்போது கடலுக்குள் Debris field கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர்'' என அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த எந்த கப்பலின் பாகங்கள் என்பது பற்றிய எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications