திமுக ஏமாற்றம்.. அமமுக, மநீம வாக்குகளை அள்ளிய அதிமுக.. 2 தொகுதியில் கலக்க இப்படி ஒரு காரணமா!
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் அதிமுக முன்னிலை வகிப்பதற்கு அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளும் ஒருவகையில் காரணம் என்கிறார்கள்.
Recommended Video
சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் அதிமுக முன்னிலை வகிப்பதற்கு அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளும் ஒருவகையில் காரணம் என்கிறார்கள்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 12507 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 29508வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 75888 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் புகழேந்தி 462697 வாக்குகள் பெற்றுள்ளார்.

முன்பு எப்படி
கடந்த லோக்சபா தேர்தலிலும் 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக சிறப்பாக வென்றது. 22 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக 9 இடங்களில் வென்றது. 9 இடங்களில் வென்றதன் மூலம் அதிமுக தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

அமமுக எப்படி
அந்த தேர்தலில் அதிமுக 13 இடங்களில் தோல்வி அடைய காரணமாக அமமுக பார்க்கப்பட்டது. அதிமுகவின் வாக்குகளை அதிக அளவில் அமமுக பிரித்தது. இதனால் அதிமுகவின் வாக்குகள் பிரிந்து திமுக எளிதாக வென்றது.

திமுக வெற்றி
திமுக அந்த தேர்தலில் வென்ற இடங்களில் பல தொகுதிகளில் மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வென்றது. அமுமக அதிமுகவின் வாக்குகளை அதிக அளவில் பிரித்ததுதான் இந்த தோல்விக்கு காரணமாக பார்க்கப்பட்டது. வேலூர் இடைத்தேர்தலில் இதேதான் நடந்தது.

வாக்கு வங்கி
வேலூர் லோக்சபா இடைத்தேர்தலில் திமுக வென்றது. ஆனால் கடைசி வரை நெக் டு நெக் போட்டி நடைபெற்று, கடைசி நொடியில்தான் திமுக வென்றது. அப்போது அமமுக போட்டியிடவில்லை. அதனால் அமமுகவின் வாக்குகள் எல்லாம் அதிமுகவிற்கு சென்றது.

இரண்டு தொகுதி தேர்தல்
இந்த நிலையில்தான் தற்போது நடந்துள்ள இடைத்தேர்தலிலும் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதியிலும் அதிமுக வெல்லும் நிலையில் இருக்கிறது. அமமுகவின் வாக்குகள் எல்லாம் அதிமுகவிற்கு சென்றதுதான் அதிமுகவின் இந்த விஸ்வரூபத்துக்கு காரணம் என்கிறார்கள்.

இரண்டு கட்சிகள்
கடந்த லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம், அமமுக ஆகிய கட்சிகள் முறையே 3% மற்றும் 2% வாக்குகளை பெற்றது. தற்போது அந்த வாக்குகள் எல்லாம் அதிமுகவிற்கு வந்துள்ளது. இதுதான் இரண்டு தொகுதியிலும் அதிமுக வெற்றிபெற காரணம் என்று கூறுகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications