சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 250 ஏரி, குளங்களை காணவில்லை! அன்புமணி ராமதாஸ் பகீர் தகவல்!
சென்னை: தமிழ்நாட்டில் திராவிட ஆட்சிகள் வந்த பிறகு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருந்த 250 ஏரி, குளங்களை காணவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். இப்போது ஏற்பட்டுள்ள இந்த வெள்ளத்துக்கு அது தான் முக்கியக் காரணம் என தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கிய அவர், அதன் பிறகு செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார். இன்று சென்னையை சுற்றியுள்ள 19 ஏரிகளின் பரப்பளவு 1980ஆம் ஆண்டு 1300 ஹெக்டேர் என்ற அளவில் இருந்ததாகவும் இன்று 500 ஹெக்டேர் பரப்பளவு தான் உள்ளது என்றும் மீதமுள்ள 800 ஹெக்டேர் எங்கே எனவும் வினவினார்.

ஆக்கிரமிப்புகளை வேடிக்கை பார்ப்பது தான் திராவிட மாடலா என்று கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ், நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்தால் தண்ணீர் வேறு எங்கு போகும் என வினவினார். லஞ்சம், ஊழல், என காசு வாங்கிக்கொண்டு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அதிகாரிகள் அனுமதி கொடுக்கிறார்கள் என மிகுந்த மனவேதனையுடன் தெரிவித்த அன்புமணி இனி வரும் காலங்களில் இப்படியே கொடுத்தால் வெள்ளப்பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என அரசை அலர்ட் செய்தார்.
அப்பார்ட்மெண்ட் விற்கிறேன், ஃபிளாட் விற்கிறேன், 10 லட்சம் கட்டினால் போதும் என ஆளாளுக்கு விளம்பரங்கள் செய்து சென்னையை நாசப்படுத்திவிட்டார்கள் என கோபம் கொப்பளிக்க தெரிவித்தார். சென்னை வெள்ளம் என்பது திடீரென்று நடக்கவில்லை என்று கடந்த 20, 30 ஆண்டுகளாக லஞ்சம், ஊழலால் காசு வாங்கிக்கொண்டு கணக்கு வழக்கின்றி அனுமதி கொடுத்து சென்னையையே நாசமாக்கிவிட்டார்கள் என அன்புமணி அதிகாரிகள் மீது பாய்ந்தார்.
சி.எம்.டி.ஏ. என்று ஒன்று எதற்கு இருக்கிறது என கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ், எதையும் திட்டமிடாமல் தொலைநோக்கு பார்வையில் சிந்திக்காமல் செயல்படுவதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications