பா.ம.க.வில் முப்படைகள்...! அன்புமணியின் புது வியூகம்
சென்னை: 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாட்டாளி மக்கள் கட்சியில் பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கிய அன்புமணி ராமதாஸ் மாற்றம், முன்னேற்றம் என்ற முழக்கத்துடன் மக்களை சந்தித்தார். ஹை-டெக் பிரச்சார உத்திகளையும் கையாண்டார். மேலும், மதுவுக்கு எதிரான அவரது பிரச்சாரம் மக்கள் மத்தியில் அதிலும் குறிப்பாக பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மாற்று அரசியலை முன்வைத்த போதும் ஜெயலலிதா, கருணாநிதி என்ற பெரிய ஆளுமைகள் அப்போது இருந்ததால் அன்புமணியால் அப்போது சோபிக்கமுடியவில்லை.

ஆனால், இன்று களநிலவரம் வேறு மாதிரி உள்ளது. இதனை உணர்ந்துகொண்ட அன்புமணி ராமதாஸ், வரும் சட்டமன்றத் தேர்தலில் பாமகவை கணிசமான தொகுதிகளில் வெற்றிபெற வைப்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளார். குறிப்பாக பாமகவின் வாக்குவங்கி உள்ள வடதமிழகத்தில் 90 தொகுதிகளை அடையாளம் கண்டு அங்கு தீவிர களப்பணியை முன்னெடுத்துள்ளார்.
தம்பிகள் படை, தங்கைகள் படை என இரண்டு படைகளை அமைத்து அதில் ஒவ்வொரு படைக்கும் 1000 இளைஞர்கள், இளம்பெண்களை சேர்த்து அவர்கள் மூலம் தொகுதியில் ஒரு லட்சம் பேரை மக்கள் படையாக உருவாக்க திட்டமிட்டுள்ளார் அன்புமணி. வடதமிழகம் மட்டுமல்லாமல் தமிழகம் தழுவிய அளவிலும் பா.ம.க.வை வலுப்படுத்த இளைஞர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
மது ஒழிப்பு போராட்டங்கள் மூலம் கடைக்கோடி மாவட்டங்களான ராமநாதபுரம், கன்னியாகுமரி வரை பாமகவை பற்றிய அறிமுகம் மக்களுக்கு உண்டு. ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மூலமே கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும் என்பது அன்புமணியின் நம்பிக்கையாம். அதனால் மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லையாம்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications