மக்கள் மிகுந்த கோபத்தில் ஆத்திரத்தில் இருக்குறாங்க.. பியூஷ் கோயலை சந்தித்த பின் அன்புமணி அட்டாக்
சென்னை: கடனை திருப்பி செலுத்த கடன் வாங்குகிறார்கள். ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கொடுக்க கடன் வாங்குகிறார்கள். இதெல்லாம் வெட்கக்கேடு என்று திமுக அரசை அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். நேற்று சென்னையில் பியூஸ் கோயலை சந்தித்த அண்புமணி ராமதாஸ் திமுக மீது மக்கள் கடும் கோபம், ஆத்திரத்தில் இருப்பதாகவும் கூறினார்.
பிரதமர் மோடி வரும் 23 ஆம் தேதி சென்னை வருகை தர உள்ளார். சென்னை மதுராந்தகத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களை மேடை ஏற்ற பாஜக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

டிடிவி தினகரன் பியூஸ் கோயல் சந்திப்பு
இதனை ஒருங்கிணைப்பதற்காக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று இரவு சென்னை வந்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் நட்சத்திர ஹோட்டலில் இன்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணைவது உறுதி செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து பா.ம.க. தலைவர் அன்புமணியை பியூஷ் கோயல் சந்தித்தார். இந்த சந்திப்பின் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பாரிவேந்தர், அன்புமணியை சந்தித்த பியூஷ் கோயல், நாளை மறுநாள் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பை விடுத்து இருக்கிறார்.
அன்புமணி விமர்சனம்
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவிற்கு 18 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பியூஷ் கோயலை சந்தித்த பிறகு அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைந்தது.
இன்று பியூஷ் கோயலை சந்தித்து வரும் தேர்தலில் எங்கள் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு மிகப்பெரிய வெற்றியை நோக்கி நாங்கள் செல்வதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றது. தமிழகத்தில் பல தரப்பு மக்கள் போராடி வருகிறார்கள். இடைநிலை ஆசிரியர்கள் 25 நாட்களாக போராடி வருகிறார்கள்.
கடும் ஆத்திரத்தில் உள்ளனர்
ஊழல், மோசமான திமுக ஆட்சியை எதிர்த்து மக்கள் அன்றாடம் போராட்டம் செய்து வருகிறார்கள். திமுக மீது அனைத்து தரப்பு மக்கள் குறிப்பாக பெற்றோர்கள், பெண்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கோபம், ஆத்திரத்தில் உள்ளனர். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை கலாசாரம்.
நேற்று கூட திருத்தணி அருகே போதைப் பொருட்களை பயன்படுத்தி கொடூரமான கொலைகள். அன்றாடம் 3, 4 கொலைகள் போதைப் பழக்கத்தால் நடந்து வருகிறது. பாமக அதிமுக கூட்டணியில் சேர்ந்ததற்கு காரணம் மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதுதான். திமுக பொய்களை சொல்லி ஆட்சி செய்து வருகிறது. மூலதன செலவுக்குத்தான் கடன் வாங்க வேண்டும்.
இதெல்லாம் வெட்கக்கேடு
நீங்கள் வட்டியை திருப்பி கட்ட கடன் வாங்குகிறார்கள். கடனை திருப்பி செலுத்த கடன் வாங்குகிறார்கள். ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கொடுக்க கடன் வாங்குகிறார்கள். இதெல்லாம் வெட்கக்கேடு. வரி வருவாய் கொடுத்துட்டு போங்க. கடன் வாங்கித்தான் இதை கொடுக்க வேண்டுமா? இந்தியாவிலே அதிக கடன் வாங்கும் மாநிலம் தமிழகம்தான். இதுதான் உங்கள் நிர்வாகத் திறமையா? சும்மா விளம்பரப்படுத்திட்டு இருக்கீங்க.." என்று பேசினார்.
-
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
சீட் தரேன்.. யாராவது இருக்கீங்களா? தேடி தேடி ஆள் பிடிக்கும் ராமதாஸ்.. இப்படி ஒரு மோசமான நிலையா? -
“மாம்பழத்தை ஜூஸ் ஆக்கிவிடாதீர்கள்..” பாமக வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கருத்து! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications