ராமதாஸ்க்கு அதிர்ச்சி.. பாமக தலைவர் அன்புமணிதான்! தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
சென்னை: பாமக தலைவர் அன்புமணிதான் என்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. அன்புமணிக்கு எதிராக சிவில் நீதிமன்ற உத்தரவு வந்தால் மட்டுமே ஆவணங்களை மாற்ற முடியும் என்றும், தங்களிடம் உள்ள ஆவணத்தின் அடிப்படையில் அன்புமணிதான் தலைவர் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவை பதிவு செய்த நீதிமன்றம் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.

ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நீண்ட நாட்களாக மோதல் நீடித்து வருகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் இது தீர்க்கப்படும் என நம்பியிருந்த தொண்டர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
இந்த சூழலில் அன்புமணி அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். நான் தான் தலைவர் என்று கூறி வந்த அன்புமணிக்கே தேர்தல் ஆணையமும் மாம்பழம் சின்னத்தை ஒதுக்கி கடிதம் அனுப்பியது. இதனால் ராமதாஸ் தரப்பினர் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்த நிலையில் அன்புமணி தரப்புக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணைய முடிவை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் தரப்பில் இன்று பதில் அளிகப்பட்டது. இதில் கட்சியும், சின்னமும் ராமதாஸ் தரப்பிற்கே என்று கூறியது. அன்புமணிக்கு எதிராக சிவில் நீதிமன்ற உத்தரவு வந்தால் மட்டுமே ஆவணங்களை மாற்ற முடியும் என்றும், தங்களிடம் உள்ள ஆவணத்தின் அடிப்படையில் அன்புமணிதான் தலைவர் என்றும் தேர்தல் ஆணையம் கூறியது.
தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவை பதிவு செய்த நீதிமன்றம் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications