மகாராஷ்டிராவை பாருங்க.. தமிழ்நாட்டிலும் இதேமாதிரி செய்யனும்! விஜய்க்கு ஐடியா கொடுத்த அன்புமணி ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: மகாராஷ்டிர மாநிலத்தை போன்று தமிழகத்திலும் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். அதேபோல், ஆட்சி மாற்றத்திற்கு பிறகும் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த காவல்துறை போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த பொத்தரை கிராமத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட பாமக கிளை கழக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

Anbumani Urges Vijay

அப்போது பேசிய அவர், "வரும் சட்டப்பேரவை கூட்ட தொடரில் ஆளுநர் உரையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான தமிழக அரசின் கொள்கை முடிவு அறிவிக்கப்பட வேண்டும் என்றார். அனைத்து சமூகங்களுக்கும் சமூக நீதி மற்றும் உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதில் பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

மேலும், கடந்த 60 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட்டு, இளைஞர்கள் அதிக அளவில் அரசியலில் ஈடுபட்டு வருவது வரவேற்கத்தக்கது. இந்த மாற்றம் எதிர்காலத்தில் பாமக ஆட்சிக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க செய்யாறு மற்றும் பாலாற்றை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

நந்தன் கால்வாய்க்காக தென்பெண்ணையாற்றில் இருந்து தனி கால்வாய் அமைக்க வேண்டும். மேலும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாராஷ்டிர மாநிலத்தை போன்று தமிழகத்திலும் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். அதேபோல், ஆட்சி மாற்றத்திற்கு பிறகும் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த காவல்துறை போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை." என்றார்.

முன்னதாக, சட்டப்பேரவைத் தோ்தலில் போளூா் தொகுதியில் பாமக தோல்விக்கான காரணம் குறித்து பொதுமக்களின் கருத்துகளை அக்கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் கேட்டறிந்தாா். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில், திருவண்ணாமலை மாவட்டம், போளூா் தொகுதியில் என்.டி.ஏ. கூட்டணியில் இடம்பெற்ற பாமக சாா்பில் சி.ஆா்.பாஸ்கரன் போட்டியிட்டாா். இவா் 61,444 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா்.

இந்நிலையில் சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வி குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு மற்றும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பொத்தரை ஊராட்சியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவா் அன்புமணிராமதாஸ் பங்கேற்று பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்தாா். மேலும், கட்சியின் செயல்பாடுகள், பொதுமக்களின் குறைகளையும் கேட்டாா். கூட்டத்தில் தொகுதியைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+