2026ல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி! எடப்பாடி பழனிசாமிக்கு ஹைவோல்ட் ஷாக் கொடுத்த அண்ணாமலை!
சென்னை: 2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரப்போவது உறுதி என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். 2026ல் மீண்டும் அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வந்து முதலமைச்சராகும் கனவில் உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலையின் இந்த பேட்டி பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

இன்னொரு கட்சியினுடைய பி டீமாகவோ, சி டீமாகவோ வரமாட்டோம் என்றும் தனித்துவத்துடன் பாஜக ஆட்சி அமைக்கும் எனவும் அண்ணாமலை நம்பிக்கை பொங்க பேசியிருக்கிறார். பாஜக பவருக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது எனவும் கூறியிருக்கிறார். இதன் மூலம் அதிமுகவுடனான பாஜக கூட்டணி கேள்விக்குறியாகியுள்ளது.
அண்ணாமலையின் இன்றைய பேட்டி குறித்து கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த விவகாரத்தில் இனியும் இப்படியே பேசவிட்டு பார்த்துக் கொண்டிருந்தால் அதிமுக தொண்டர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால் எடப்பாடி பழனிசாமி தரப்பு அடுத்தக் கட்ட பாய்ச்சலுக்கு தயாராகிவிட்டது.
விநாயகர் சதுர்த்தி முடிந்த கையோடு அண்ணாமலையின் இன்றைய பேட்டிக்கு எடப்பாடி பழனிசாமி பிரஸ்மீட் மூலம் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications