Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமர் பிரசாத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டது பாஜகவுக்கு நல்லது தானாம்.. அண்ணாமலை சொல்றதை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டது பாஜகவிற்கு நல்லது தான் என்றும், பாஜகவின் வளர்ச்சிக்கு திமுக உதவுகிறது என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை பனையூரில் அமைந்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வீட்டின் அருகே இருந்த 45 அடி உயர கம்பத்தில், கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு பாஜக ஏற்பாடு செய்திருந்தது. அனுமதி பெறாமல் கொடிக்கம்பம் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் புகார் அளித்திருந்தனர். அதன் பேரில் மாநகராட்சி ஊழியர்கள் அந்தக் கொடிக்கம்பத்தை அகற்றுவதற்கு ஜேசிபி உடன் வந்தனர்.

Annamalai says that dmk government is helping for bjps growth

அப்போது பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் அரசுக்கு எதிராக கோஷமிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதில் போலீசார், பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் மாநகராட்சி அதிகாரிகள் கொடிக்கம்பத்தை அகற்ற கொண்டு வந்த ஜேசிபி இயந்திரத்தையும் கற்களை கொண்டு தாக்கி கண்ணாடிகளை உடைத்தனர்.

இந்நிலையில், ஜேசிபியின் கண்ணாடி உடைத்த வழக்கில், கன்னியப்பன், பாலமுருகன், செந்தில் குமார், சுரேந்திர குமார், வினோத்குமார் ஆகியோரை கானாத்தூர் போலீசார் கைது செய்தனர். பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டியையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 6 பேரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "கொடிக்கம்பம் நடப்பட்ட விவகாரத்தில் பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டது பாஜகவிற்கு நல்லது தான். அரசியல் கட்சிகளை பொறுத்தவரை இரண்டு விதமான வளர்ச்சி இருக்கும். ஒன்று தானாக வளர்ந்து வருவது, இன்னொன்று மற்றொரு கட்சி அந்த கட்சியை வளர்த்து விடுவது. தமிழகத்தில் நேர்மையான ஊழல் இல்லாத ஆட்சியை பாஜக-வால் மட்டுமே தரமுடியும்.

பாஜகவின் வளர்ச்சிக்கு திமுக அதிக உதவிகளைச் செய்து வருகிறது.இது போன்ற சம்பவங்களை சந்திக்கும் போது தான் ஒரு தொண்டன் தலைவனாக வர முடியும். சென்னையில் எத்தனை திமுக கொடி கம்பங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளனர்? நவம்பர் 1 முதல் 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 100 கொடிக்கம்பங்கள் நடப்படும். கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இன்றே கொடிக்கம்பங்கள் நடப்படும்.

சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடும் என்று திமுகவினர் நினைக்கிறார்கள். ஆனால் கொடிக்கம்பங்களை தாமதமாக வைத்து வந்த தொண்டர்கள் இதன் பிறகு துரிதமாக வைப்பார்கள். ஆக, திமுக அரசின் இந்த செயல் எங்கள் கட்சியின் வளர்ச்சிக்கு இன்னும் வேகமும், உத்வேகமும் அளிக்கிறது.

திமுக தங்களின் நம்பர் ஒன் எதிரியாக பாஜகவை பார்க்க ஆரம்பித்துள்ளது. பாஜகவும் எங்களுடைய நம்பர் ஒன் எதிரியாக திமுகவை பார்க்க ஆரம்பித்துவிட்டோம். எனவே, தேர்தல் களத்தில் சந்திப்போம். அதுவரை சண்டை சச்சரவுகள் நடக்கத்தான் போகிறது. இவை ஜனநாயக அரசியலில் தவிர்க்க முடியாத விஷயங்கள். பாஜக தொண்டர்கள் இன்று 13 பேர் சிறையில் உள்ளனர். அதில் 6 பேர் அந்த கொடிக்கம்ப வழக்கில் சிறையில் உள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+