முதலில் ஆளுநர் ரவி.. அடுத்து அண்ணாமலை.. இந்தியில் பரவும் வீடியோ.. ஆர்எஸ் பாரதிக்கு நெருக்கடி
சென்னை: நாகாலாந்து மக்கள் நாய்கறி சாப்பிடுவது குறித்து ஆர்எஸ் பாரதி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆளுநர் ரவி வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், அடுத்ததாக அண்ணாமலையும் இந்த விவகாரத்தில் இந்தி சப்டைட்டில் மற்றும் ஆங்கில சப் டைட்டிலும் வீடியோ வெளியிட்டுள்ளார். வடமாநிலங்களில் இந்த வீடியோ பரவ தொடங்கி உள்ளது.
உதயநிதி சனாதனம் குறித்து பேசிய பேச்சை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில நிர்வாகிகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் சப் டைட்டிலுடன் வெளியிட்டார்கள். இந்த வீடியோ வட மாநிலத்தில் உள்ள பாஜக ஆதரவாளர்கள் அதிக அளவில் பரப்பினார்கள். இதனால் உதயநிதி பேசிய வீடியோ இந்தியா முழுவதும் பரவியது. சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் எழுந்தது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா வரை பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த வீடியோ வடமாநிலங்களில் மின்னல் வேகத்தில் பரவியது. இரண்டு வாரத்திற்கு மேல் சர்ச்சை நீடித்தது. ஆனால் உதயநிதி ஸ்டாலின் கடைசிவரை தான் பேசிய நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை.. அதேநேரம் சனாதனத்தின் பெயரில் நடைபெறும் சாதியவேற்றுமைகளையே ஒழிக்க வேண்டும் என்ற பொருளில் தான் பேசியதாகவும், இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசவில்லை என்றும் உதயநிதி விளக்கம் கொடுத்தார். இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிருப்தியும் தெரிவித்தது.
இதனிடையே கடந்த இரண்டு நாள் முன்பு, திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி பேசுகையில், "இன்றைக்கு ஆளுநராக வந்திருக்கிறாரே அவர் என்ன செய்கின்றார். இந்த ஆட்சிக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்றே செயல்படுகிறார். எத்தனையோ ஆளுநர்களை பார்த்திருக்கிறோம். இந்த ஆளுநர் என்ன செய்கிறார் என்றால், வேண்டும் என்றே வம்புக்கு சண்டைக்கு இழுக்கிறார் அவர்.. நாம் அனுப்பும் மசோதாக்களுக்கு கூட கையெழுத்து போட முடியாது என்று சொல்கிறார். நான் கூட ஒரு கூட்டத்தில் சொன்னேன்.. நாகாலாந்திலே இவருக்கு ஏற்பட்ட நிலை என்ன தெரியுமா? ஊரே விட்டே விரட்டி அடிச்சாங்க.. நாகாலாந்துக்காரர்கள் நாய் கறி சாப்பிடுவார்கள், நாய் கறி திண்பர்களுக்கே அவ்வளவு சொரணை இருந்து, இந்த கவர்னரை ஓட ஓட விரட்டினார்கள் என்றால், உப்பு போட்டு சோறு திண்ணும் தமிழனுக்கு எந்த அளவிற்கு சொரணை இருக்கும்" என்று பேசியிருந்தார்.
The recent attack on Raj Bhavan is an outcome of such uncouth speeches against the Hon Governor by DMK leaders, yet DMK doesn't seem to have learnt the lesson.
— K.Annamalai (@annamalai_k) November 6, 2023
Reducing the pride of our North Eastern brothers & sisters to Dog eaters is highly condemnable.
While Thiru… pic.twitter.com/mJOI7fY8fm
இதற்கு பதிலடி கொடுத்த ஆளுநர் ரவி, "நாகாக்கள் தைரியமான, நேர்மையான மற்றும் கண்ணியமான மக்கள். தி.மு.க.வின் மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி, நாகாலாந்து மக்களை 'நாய் கறி தின்பவர்கள்' என்று பகிரங்கமாக திட்டுவது கேவலமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒட்டுமொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை புண்படுத்த வேண்டாம் என்று ஆர்.எஸ். பாரதியிடம் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.
இதற்கு பதில் அளித்த ஆர்எஸ் பாரதி, நாகாலாந்து மக்களை நான் இழுவுப்படுத்தியதாக ஆளுநர் ரவி கூறுவது முற்றிலும் திசைதிருப்பும் முயற்சி. நாகாலாந்து மக்கள் நாய்கறி உண்பது அவர்களின் கலாச்சாரம் என்பதனை கவுகாத்தி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உறுதி செய்துள்ளது என்றார். மேலும் நாகாலாந்தில் நாய்கறி தடை சட்டம் ஆளுநர் ரவி கொண்டு வந்தார் என்றும், அதனால் தான் மக்கள் அவரை விரட்டினார்கள் என்றும் ஆர்எஸ் பாரதி ஊடகங்களுக்கு விளக்கம் அளித்ததுடன், தான் ஒப்பிட்டது ஏன் என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.
இதனிடையே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அந்த வீடியோவை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் சப் டைட்டில் போட்டு வெளியிட்டு அதன் மீது கேப்சனாக இந்த பதிவினை போட்டுள்ளார். அதில் சமீபத்தில் நடந்த ராஜ்பவன் மீதான தாக்குதல், ஆளுநருக்கு எதிராக திமுக தலைவர்கள் நடத்திய அநாகரீகமான பேச்சுகளின் விளைவுதான், ஆனாலும் திமுக பாடம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. நமது வடகிழக்கு சகோதர சகோதரிகளின் பெருமையை நாய் உண்பவர்களாக மாற்றுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.
அண்ணாமலை இந்தியில் மொழி பெயர்த்த வீடியோ தற்போது வடமாநிலங்களில் பரவி வருகிறது. வடமாநிலங்களில் தனது வீடியோ பரப்பப்டுவது குறித்து கருத்து தெரிவித்த ஆர்எஸ் பாரதி, திமுகவை பற்றி தவறான பிம்பம் வடமாநிலங்களில் ஏற்படுத்த வேண்டும் என்று செய்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications