தமிழ்நாடு, புதுவையில் அமலுக்கு வந்தது.. 61 நாட்கள் மீன் பிடி தடை காலம்.. ஏன் முக்கியம் தெரியுமா?
சென்னை: கடலில் மீன்வளத்தை பெருக்க ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. அந்த வகையில், மீன்களின் இனப்பெருக்க காலத்தை ஒட்டி இன்று நள்ளிரவு முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை என 61 நாட்களுக்கு மீன் பிடிக்க மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் 61 நாட்கள் மீன் பிடி தடை காலம் அமலுக்கு வந்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த தடைக் காலம் அமலுக்கு வந்து இருக்கிறது. இந்த தடைக்காலக்கத்தில் மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று மீன் பிடிக்க அனுமதி கிடையாது. இன்று(சனிக்கிழமை) நள்ளிரவு முதல் வரும் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரை இந்த மீன் பிடி தடைக்காலம் அமலில் இருக்கும்.

மீன் பிடி தடைக்காலம் அமலுக்கு வந்து இருப்பதால் நாகை, வேதாரண்யம் உள்பட கடலோர பகுதிகளில் நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்க காலமாக குறிப்பிட்ட நாட்கள் கருதப்படுகிறது. இந்த கால கட்டத்தில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக கடலில் யாரும் மின் பிடிக்க செல்ல அனுமதி அளிக்கப்படாது.
இந்த நாட்களில் மீன் பிடி தடை காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடலில் மீன் வளத்தை பெருக்கவும் கடல் வளத்தை பாதுகாத்திடும் வகையிலும் தமிழ்நாடு கடல் மீன் பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் படி தடைக்காலம் அறிவிக்கப்பட்டு வருகிறது.
தடைக்காலம் அமலில் வந்துள்ளதால், தமிழகத்தில் கிழக்கு கடலோர பகுதிகளான திருவள்ளூர் முதல் கடைக்கோடியில் உள்ள கன்னியாகுமரி வரை மீனவர்கள் விசைப்படகுகளில் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள். கன்னியாகுமரி - சென்னை வரை சுமார் 8 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்குள் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications