கட்டம் கட்டுதே.. கட்டம் போட்டு காண்பித்த தமிழ்நாடு வெதர்மேன்.. வெளியிட்ட முக்கிய வானிலை எச்சரிக்கை
சென்னை: சென்னையில் நிலவி வரும் மோசமான வெப்பநிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் போஸ்ட் செய்துள்ளார்.
சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.
சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது.

எச்சரிக்கை : இந்த நிலையில் சென்னையில் நிலவி வரும் மோசமான வெப்பநிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் போஸ்ட் செய்துள்ளார்.
அதில், சென்னையில் மீண்டும் இன்று அதிகாலை கடல் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நகரின் மேற்கு பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகள் தொடர்ந்து சூடாக இருக்கும். ஏனென்றால் கடல் காற்று அங்கு செல்ல நேரம் எடுக்கும்
இதனால் அந்த பகுதிகள் சூடாக இருக்கும். 40டிகிரி செல்ஸியஸ் பின்வரும் மாவட்டங்களில் பதிவாகி உள்ளது. கரூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விருதுநகர், மதுரை மற்றும் து.மலையின் சில பகுதிகள், தூத்துக்குடியின் சில பகுதிகள், நெல்லை மாவட்டத்தின் சில பகுதிகள்.
சென்னை, வேலூர், திருத்தணி பெல்ட் & கரூர் ஆகியவற்றின் புறநகர்ப் பகுதிகள் சூடான பகுதிகளின் லிஸ்டில் அதாவது ஹாட் சார்ட்களில் முதலிடத்தைப் பிடிக்கும் என்று சென்னை வானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் போஸ்ட் செய்துள்ளார்.

கட்டம் கட்டுது : மேலும், நேற்று இருந்ததை போலவே, சென்னை வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸைத் தொட்ட பிறகு கடல் காற்று சென்னை நகருக்குள் செல்லத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் சென்னை நகரின் மேற்குப் பகுதிகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானிலை உக்கிரமடைந்து வருகிறது. இந்த பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸை நோக்கி இன்று செல்லக்கூடும். (கடல் காற்று வரக்கூடிய நிலையை கட்டம் போட்டு காண்பித்துள்ளார்.
கடலுக்கு அருகில் உள்ள பகுதிகள் கடல் காற்றை அனுபவித்து வருகின்றன. ஆனால் அதே வேளையில், அம்பத்தூர், கொளத்தூர், அண்ணாநகர் வெஸ்ட், போரூர், மொகப்பேர் போன்ற நகரத்தின் மேற்குப் பகுதிகள் அனைத்தும் கடுமையான வெப்பத்தை எதிர்கொண்டு வருகின்றன.
மதியம் 1.30 மணிக்கு வெப்பநிலை
கடல் காற்று வீசும் பகுதிகள் இல்லாமல் மற்ற பகுதிகள்
----------
வானகரம் (ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி) 40.7 டிகிரி செல்ஸியஸ்
தாம்பரம் (SIT) 40.1டிகிரி செல்ஸியஸ்
செம்பா 39.9 டிகிரி செல்ஸியஸ்
திரூர் 39.4 டிகிரி செல்ஸியஸ்
வில்லிவாக்கம் / அண்ணாநகர் மேற்கு 39.1 டிகிரி செல்ஸியஸ்
பொத்தேரி 38.6 டிகிரி செல்ஸியஸ்
கடல் காற்று வீசும் பகுதிகள்
----
எண்ணூர் 31.7 டிகிரி செல்ஸியஸ்
எம்ஆர்சி நகர் 32.6 டிகிரி செல்ஸியஸ்
நந்தனம் 33.7 டிகிரி செல்ஸியஸ்
தரமணி 34.1 டிகிரி செல்ஸியஸ்
நுங்கா 34.9 டிகிரி செல்ஸியஸ்
மாதவரம் 35.1 டிகிரி செல்ஸியஸ்
என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எச்சரிக்கையை குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications