தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள் கிடைக்குமா? தாங்க முடியாத அளவிற்கு விலைகள்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது, வரத்து குறைவால் மளிகை பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அனைத்து வகையான மளிகை பொருட்களையும் குறைந்த விலையில் விநியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் 8 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில், தேவையான பல மளிகை பொருட்கள் தமிழகத்தில் உற்பத்தி ஆவது இல்லை. வெளிமாநிலங்களில் இருந்து தான் வருகிறது. வறட்சி மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக ல் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை மாதம் மாதம் அதிகரித்து வருகிறது. சென்னையில் மொத்த விற்பனையில் கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது பல மளிகை பொருட்களின் விலை 5 ரூபாய் முதல் 20 ரூபாய்க்கு மேல் உயர்ந்துவிட்டது.

தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட அரிசி உற்பத்தி கணிசமாக குறைந்து விட்டது. இதன் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு அரிசி லாரிகளில் வருகிறது. அப்படி அரிசியை கொண்டு வருவதால், அரிசி ஒரு கிலோவுக்கு 8 ரூபாய் முதல் 15 ரூபாய்க்கு மேல் 'உயர்ந்துள்ளது.
கோடை காலம் தொடங்கியதில் இருந்தே வெளி மாநிலங்களில் இருந்து வரும் மளிகை பொருட்களின் வரத்து குறைந்துவிட்டது.. இதன் காரணமாக அவற்றின் விலை கடந்த இரண்டு மாதங்களாக கடுமையாக உயர்ந்து வருகிறது. துவரம் பருப்பு, பூண்டு, அரிசி ஆகிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இரு மாதங்களுக்கு முன்பு ரூ.140 வரை விற்கப்பட்டு வந்த துவரம் பருப்பு , இப்போது ரூ.180 வரை விற்கப்படுகிறது.
அதேபோல் ஒரு கிலோ ரூ.140 வரை விலை குறைந்த பூண்டு, தற்போது ஒரு கிலோ ரூ.250-க்கு மேல் விலை உயர்ந்துள்ளது. அரிசி விலை தொடர்ந்து உயருகிறது. ரூ.50-க்கு கீழ் அரிசி வாங்கவே முடியாத நிலை வந்துவிட்டது. 50 ரூபாய் அரிசி இப்போது 70 ரூபாய் என்கிற அளவிலும், 60 ரூபாய் அரிசி 77 ரூபாய் அல்லது 80 ரூபாய் வரையிலும் ஒரு கிலோவிற்கு உயர்ந்துவிட்டது..
வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்படும் சன்னரகம் புழுங்கல் அரிசி கிலோ ரூ.65 ஆகவும், பாசுமதி அரசி ரூ.105-க்கு மேல் விற்கப்படுகிறது. இதேபோல் உளுத்தம் பருப்பு ரூ.120-லிருந்து ரூ.135, கடலைப்பருப்பு ரூ.75-லிருந்து ரூ.85, சர்க்கரை ரூ.40-லிருந்து ரூ.42, குண்டு மிளகாய் ரூ.180-லிருந்து ரூ.245 ஆக உயர்ந்துவிட்டது.
நீட்டுமிளகாய் ரூ.180-லிருந்து ரூ.190, தனியா ரூ.105-லிருந்து ரூ.110 என விலை உயர்ந்துள்ளது. ரூ.82-க்கு விற்கப்பட்ட கடுகு ரூ.95-க்கும், ரூ.625-க்கு விற்கப்பட்ட மிளகு ரூ.720-க்கும், ரூ.88-க்கு விற்கப்பட்ட வெந்தயம் ரூ.95-க்கும் விற்பனையாகிறது. கடந்த பிப்ரவரி மாதம் ஒரு கிலோ ரூ.160-க்கு விற்கப்பட்ட மஞ்சள் தூள் தற்போது ரூ.222-க்கு விற்பனை ஆகிறது.
மளிகை பொருட்கள்: எண்ணெய், மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திர செலவு கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு உள்பட பல்வேறு மளிகை பொருட்களை குறைந்த விலையில் ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதேபோல் தேங்காய் எண்ணெய்யை ரேஷன் கடைகளின் மூலம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் மக்கள் வைத்துள்ளனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications