ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: குண்டர் சட்ட வழக்குகளின் விசாரணை எட்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பு
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணையை எட்டு வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என். செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சில வாதங்களை முன்வைத்தார். இதனையடுத்து, விசாரணையை எட்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு ஐந்து மாதங்களுக்கு மேல் ஆவதாகவும், மனுதாரர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
இதற்கு, பொதுமக்களின் அமைதியே முக்கியம் எனக்கூறிய நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications