ஜெயலலிதா மரண வழக்கு.. எடப்பாடியிடம் விசாரிக்காமலேயே.. விசாரணை நிறைவடைந்ததாக ஆறுமுகசாமி ஆணையம் தகவல்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண வழக்கில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் நிர்வாகி வா புகழேந்தி மனு தாக்கல் செய்த நிலையில் விசாரணை நிறைவடைந்ததாக ஆறுமுகசாமி ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பல்லோ தொடர்ந்த வழக்கில் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நிறுத்தப்பட்டது.
இதையடுத்து கடந்த மாதம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த தொடங்கியது. இதில் ஓபிஎஸ்ஸிடம் ஆணையம் விசாரணை நடத்தியது. அதில் ஆணையம் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் தனக்கு தெரியாது என்ற பதிலையே கூறியிருந்தார்.

ஆறுமுகசாமி ஆணையம்
அது போல் சசிகலாவின் அண்ணி இளவரசியிடமும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது. இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியையும் விசாரிக்க வேண்டும் என அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கோரிக்கை வைத்துக் கொண்டே இருந்தார்.

ஆணையத்திடம் புகழேந்தி மனு
இது தொடர்பாக ஆணையத்திடமும் புகழேந்தி மனு அளித்துள்ளார். அந்த மனுவில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைத்து உத்தரவிட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் விசாரணை நடத்த வேண்டும். ஜெயலலிதா மரணத்திலும் சிகிச்சையிலும் தனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை என ஓபிஎஸ் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியாக உள்ளது.

மறு விசாரணை நடத்த வேண்டும்
எனவே இது தொடர்பாக, முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ், சுகாதாரத் துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் மறு விசாரணை நடத்த வேண்டும் என்று புகழேந்தி தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனு மீது கடந்த வாரம் விசாரணை நடந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளிக்க ஏப்ரல் 26ஆம் தேதி ஆஜராகுமாறு புகழேந்திக்கு ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

எடப்பாடியிடம் விசாரணை
மேலும் அன்றைய தினம் எடப்பாடியிடம் விசாரணை குறித்தும் ஆணையம் முடிவு செய்யும் என்றும் கூறியிருந்தது. அதன்படி புகழேந்தி தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடக்கிறது. சென்னையில் இன்று காலை 10.30 மணிக்கு ஆஜராகினார் புகழேந்தி. இதனால் இவரது வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து எடப்பாடி பழனிச்சாமியிடம் விசாரணை நடத்துவது குறித்து இன்று ஏதேனும் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது.

விசாரணை முடிந்ததாக ஆணையம் தகவல்
ஆனால் ஆறுமுகசாமி ஆணையம் அனைத்து தரப்பினரிடமும் விசாரணையை நடத்தி முடித்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் விசாரணையை முடித்து விட்டதாக ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இது வரை 152-க்கும் மேற்பட்டோரின் விசாரணை நடத்தியுள்ளது இந்த ஆணையம். இதன் பதவிக் காலம் அடுத்த மாதம் மே 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே தற்போது அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்யப்பட வேண்டிய ஆய்வறிக்கையை பெற்றவுடன் ஒட்டுமொத்தமாக ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கையை அடுத்த மாதத்திற்குள் தமிழக அரசிடம் ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்யும் என தெரிகிறது.
-
எடப்பாடி பழனிசாமி போட்ட 3 கண்டிஷன்? தஞ்சையில் தினகரன் சொன்ன 1 விஷயம்.. உடைந்தது அரசியல் மர்மம் -
கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் கதி அதோ கதிதான்.. புட்டுபுட்டு வைத்த அதிமுக முன்னாள் நிர்வாகி -
ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் என அறிவித்தது இதற்காகத்தான்.. கனிமொழி பிரசாரம்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்












Click it and Unblock the Notifications