செக்க செவேல்னு மின்னும் சென்னை.. சுற்றி சிவப்பு தக்காளிகள்! அசானி புயலால் மீண்டும் மழை இருக்கு!
சென்னை: அடுத்த சில மணி நேரங்களுக்கு சென்னையில் மழை இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Recommended Video
தென் கிழக்கு அந்தமான் பகுதியில் அசானி புயல் ஒடிஸா- மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயலின் திசையில் மாற்றம் ஏற்பட்டதால் இது மீண்டும கடலை நோக்கியே திரும்பியது.
இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் பெரும்பாலான இடங்களில் இன்று அதிகாலை முதலே பலத்த மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

குளிர்ச்சியான சூழல்
இதனால் சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். சென்னைக்கு வரும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அது போல் மெட்ரோ ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இரு நாட்கள்
அது போல் சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு மழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். அதற்கேற்ப சென்னையில் குளிர் நிலவுகிறது. ஏசி எல்லாம் ஆப் மோடில் இருக்கின்றன. சென்னையில் பல ஆண்டுகள் கழித்து மே மாதம் மழை பெய்துள்ளதால் மக்களுக்கு அதிர்ச்சி கலந்த மழையாகவே இது இருக்கிறது.

இடியுடன் கூடிய மழை
இந்த மழை அடுத்த சில மணி நேரங்களுக்கு பெய்ய வாய்ப்பிருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளார்கள். தமிழக கடலோரம் மற்றும் வடக்கு உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்துள்ளார். நெல்லூர், சென்னை, புதுவை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி சிவப்பு தக்காளிகள் உள்ளன.

மழை
இதனால் இந்த பகுதிகளில் மழை பெய்யும். சென்னையின் புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. சூறாவளி காற்று வீசுகிறது. மரங்கள் வளைந்தாடும் அளவுக்கு காற்று வீசி வருகிறது. காலையில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது மாலையும் மழை பெய்யும் சூழல் இருப்பதால் போக்குவரத்தை கருத்தில் கொண்டு பலர் முன்கூட்டியே வீடுகளுக்கு கிளம்ப நேரிடும் சூழல் உள்ளதாக தெரிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications