இந்தியா - பாக் 2 அணிக்காகவும் கிரிக்கெட் ஆடிய ஒரே வீரர்.. யாருங்க இது? பிரம்மிக்க வைக்கும் பின்னணி
சென்னை: ஆசிய கோப்பை 2022 தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி வென்றுள்ளது. இந்த போட்டியில் இந்தியா வென்றதை இந்திய அணி ரசிகர்கள் கொண்டாடி வரும் இந்த நிலையில்தான்.. இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிக்காகவும் விளையாடிய கிரிக்கெட் வீரர் ஒருவரை பற்றிய கதை இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை 2022 தொடர் ஆட்டம் நேற்று முதல் நாள் விறுவிறுப்பாக நடைபெற்றது. கடைசி ஓவர் வரை திக் திக் என்று திரில்லாக சென்ற இந்த ஆட்டத்தில் பாண்டியாவின் கூல் பினிஷிங் காரணமாக இந்தியா வெற்றியை வசப்படுத்தியது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 147 ரன்கள் எடுத்து 19.5 ஓவரில் பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் கோலி 35, ஜடேஜா 35, ஹர்திக் பாண்டியா 33 என்று அதிரடியாக ரன்களை குவிக்க.. இந்திய அணி 19.4 ஓவரிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து வென்றது.

ஒரே வீரர்
இந்த நிலையில்தான் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்காக விளையாடிய ஒரு வீரரை பற்றிய கதை பிரபலம் ஆகி வருகிறது.. என்ன இந்தியா பாகிஸ்தான் அணிக்காக ஒரே வீரர் ஆடினாரா? என்னங்க சொல்றீங்க? இப்போ டீம்ல இருக்காரா என்று கேட்க வேண்டாம். அவர் மிகவும் பழைய வீரர். அதற்கு கொஞ்சம் கிரிக்கெட் வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டும். இந்தியா சுதந்திரம் அடையும் முன்பே இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்டுவிட்டது.

கிரிக்கெட்
1932ல் இருந்தே இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் ஆடி வந்தது. அப்போதெல்லாம் பரோடா கிரிக்கெட் அணிதான் இந்திய அணியாக கருதப்பட்டது. சில நாடுகளுக்கு டூர் செய்து கூட இந்த அணி ஆடியது. இந்த அணியில் ஆடிய முக்கிய வீரர்தான் அமீர் இலாஹி. அப்போது இந்திய தேசிய அணி வீரராக இவர் கருதப்பட்டார். அதன்பின் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. அதோடு இந்தியா பாகிஸ்தான் இரண்டாக பிரிந்தது.

வரலாறு
இஸ்லாமியரான இவர் பாகிஸ்தான் மீதான பற்று காரணமாக பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தார். இந்தியாவில் இருக்க விருப்பமின்றி பாகிஸ்தானுக்கு குடும்பத்தோடு சென்றார். இதனால் அவர் இந்திய அணியில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார். பாகிஸ்தானில் புதிய கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்டதும், அனுபவம் மிக்கவர் என்பதால் நேரடியாக அமீர் இலாஹிக்கு பாகிஸ்தான் தேசிய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

பின்னணி
ஆனால் இந்திய அணிக்காகவும், பாகிஸ்தான் அணிக்காகவும் இவர் பெரிதாக மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடியது இல்லை. உதாரணமாக இவர் இந்திய அணியில் இருந்த வரை இந்தியா ஒரு டெஸ்டில் கூட வென்றது இல்லை. பாகிஸ்தான் அணியிலும் இவர் அவ்வளவு சிறப்பாக ஆடவில்லை. பவுலிங் செய்யும் இவர்.. மிக குறைவான வேகத்தில் பந்து வீசி வந்ததாக கூறப்படுகிறது. இந்திய அணிக்காக ஆடிய இவர் 1953 இந்திய சுற்றுப்பயணத்தின் போது பாகிஸ்தான் அணியில் இணைந்து இந்தியாவிற்கே எதிராக ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா பாகிஸ்தான் என்ற இரண்டு அணிகளுக்காக ஒரே நபர் குறைந்த ஆண்டுகள் இடைவெளியில் ஆடிய இந்த கதை கிரிக்கெட் ரசிகர்கள் இடையே கவனம் பெற்றுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications