Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதா மரணம்.. ஆறுமுகசாமி ஆணையம் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும்! சீறிய பெங்களூர் புகழேந்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி கமிஷன் தொடர்பாகப் பெங்களூர் புகழேந்தி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    ஜெயலலிதா மரணம்.. ஆறுமுகசாமி ஆணையம் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும்! சீறிய பெங்களூர் புகழேந்தி

    அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூர் வா.புகழேந்தி ஒசூர் தனியார் ஓட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

    அப்போது அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்ய அணைக்கப்பட்ட ஆறுமுகசாமி கமிஷன் குறித்து சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

     பெங்களூர் புகழேந்தி

    பெங்களூர் புகழேந்தி

    அப்போது பெங்களூர் புகழேந்தி கூறுகையில், "ஆறுமுகசாமி கமிஷன் மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடியால் ஆணையம் அமைக்கப்பட்டது, அதற்குக் காரணமானவர் ஓபிஎஸ், அம்மாவின் சாவில் உள்ள மர்மத்தைத் தெரிந்துகொள்ள அமைக்கப்பட்டது. பல இடையூறுகளுக்குப் பிறகு ஆணையம் செயல்படுகிறது. ஸ்டாலின் தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டிருந்தார்.

    ஓபிஎஸ்

    ஓபிஎஸ்

    யார் மீது சந்தேகமில்லை, சசிகலா மீது பற்றுடையவன் என ஓபிஎஸ் ஆணையத்தில் கூறியுள்ளார். அப்படியானால் ஆணையம் எதற்கு..? எடப்பாடி பழனிசாமி ஊழல்வாதி எனக் கூறியவர் ஓபிஎஸ். தர்மயுத்தம் நடத்தி கட்சியில் இணைந்தீர்கள், மக்கள் மடையர்களா? முட்டாளா? சாதாரண ஓபிஎஸ், உயரத்திற்குக் கொண்டு சென்றவர் அம்மா, சசிகலா மீது போடப்பட்ட பழி போகுமா? பழி போகும் என்றாலும், ஓபிஎஸ் - இபிஎஸ் பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்

     விசாரணை ஆணையம்

    விசாரணை ஆணையம்

    விசாரணை ஆணையம் என்பது நாங்கள் சேர்ந்துகொள்ளத் தான் என்பதைக் கூற வேண்டும். எனவே, எடப்பாடி பழனிசாமியை ஆறுமுகசாமி கமிஷன் அழைத்து விசாரிக்க வேண்டும். இப்போது மூளை முடுக்கெல்லாம், ஜெயலலிதாவை சசிகலா கொன்று விட்டார் என கேபி.முனுசாமி உள்ளிட்டோர் ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டி வருகின்றனர். எம்ஜிஆரை போல் ஏன்? ஜெயலலிதாவை ஏன் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்லவில்லை.

     நாடகமாடிய ஓபிஎஸ்

    நாடகமாடிய ஓபிஎஸ்

    ஆறுமுகசாமி ஆணையம் என்னையும் விசாரிக்கட்டும், சசிகலா மருத்துவரல்ல.. ஜெயலலிதாவை மருத்துவமனையில் சேர்த்ததே அவர் தான். ஓபிஎஸ் தொடர்ந்து நாடகமாடி வருகிறார். புகழேந்தி விடமாட்டான், மக்களை ஏமாற்ற நினைப்பவர்கள். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குத் துரோகம் செய்கிறார்கள் என யாரையும் விடக் கூடாது அனைவரையும் கைது செய்ய வேண்டும்" என்றார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+