ஜெயலலிதா மரணம்.. ஆறுமுகசாமி ஆணையம் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும்! சீறிய பெங்களூர் புகழேந்தி
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி கமிஷன் தொடர்பாகப் பெங்களூர் புகழேந்தி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூர் வா.புகழேந்தி ஒசூர் தனியார் ஓட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்ய அணைக்கப்பட்ட ஆறுமுகசாமி கமிஷன் குறித்து சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பெங்களூர் புகழேந்தி
அப்போது பெங்களூர் புகழேந்தி கூறுகையில், "ஆறுமுகசாமி கமிஷன் மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடியால் ஆணையம் அமைக்கப்பட்டது, அதற்குக் காரணமானவர் ஓபிஎஸ், அம்மாவின் சாவில் உள்ள மர்மத்தைத் தெரிந்துகொள்ள அமைக்கப்பட்டது. பல இடையூறுகளுக்குப் பிறகு ஆணையம் செயல்படுகிறது. ஸ்டாலின் தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டிருந்தார்.

ஓபிஎஸ்
யார் மீது சந்தேகமில்லை, சசிகலா மீது பற்றுடையவன் என ஓபிஎஸ் ஆணையத்தில் கூறியுள்ளார். அப்படியானால் ஆணையம் எதற்கு..? எடப்பாடி பழனிசாமி ஊழல்வாதி எனக் கூறியவர் ஓபிஎஸ். தர்மயுத்தம் நடத்தி கட்சியில் இணைந்தீர்கள், மக்கள் மடையர்களா? முட்டாளா? சாதாரண ஓபிஎஸ், உயரத்திற்குக் கொண்டு சென்றவர் அம்மா, சசிகலா மீது போடப்பட்ட பழி போகுமா? பழி போகும் என்றாலும், ஓபிஎஸ் - இபிஎஸ் பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்

விசாரணை ஆணையம்
விசாரணை ஆணையம் என்பது நாங்கள் சேர்ந்துகொள்ளத் தான் என்பதைக் கூற வேண்டும். எனவே, எடப்பாடி பழனிசாமியை ஆறுமுகசாமி கமிஷன் அழைத்து விசாரிக்க வேண்டும். இப்போது மூளை முடுக்கெல்லாம், ஜெயலலிதாவை சசிகலா கொன்று விட்டார் என கேபி.முனுசாமி உள்ளிட்டோர் ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டி வருகின்றனர். எம்ஜிஆரை போல் ஏன்? ஜெயலலிதாவை ஏன் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்லவில்லை.

நாடகமாடிய ஓபிஎஸ்
ஆறுமுகசாமி ஆணையம் என்னையும் விசாரிக்கட்டும், சசிகலா மருத்துவரல்ல.. ஜெயலலிதாவை மருத்துவமனையில் சேர்த்ததே அவர் தான். ஓபிஎஸ் தொடர்ந்து நாடகமாடி வருகிறார். புகழேந்தி விடமாட்டான், மக்களை ஏமாற்ற நினைப்பவர்கள். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குத் துரோகம் செய்கிறார்கள் என யாரையும் விடக் கூடாது அனைவரையும் கைது செய்ய வேண்டும்" என்றார்.
-
கோவை தெற்கில் பந்தயம் அடிக்கணும்.. செந்தில் பாலாஜிக்கு வேலுமணி செக் -
ரொம்ப ஓவரா போறீங்கடா.. எடப்பாடி பழனிசாமிக்கு உம்மா கொடுத்த அதிமுக வேட்பாளர் -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு!












Click it and Unblock the Notifications