முற்றுகையிடப்பட்ட செந்தில் பாலாஜி வீடு.. கூடிய பார் உரிமையாளர்கள்.. பெரும் கோஷம்.. என்ன நடந்தது?
சென்னை: சென்னையில் மின்சாரத் துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு பலர் கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.
Recommended Video
தமிழ்நாட்டில் மின்சாரத்துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறை ஆகிய இரண்டு துறைகளையும் அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வருகிறார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு முன் டாஸ்மாக் சார்பாக பார் டெண்டர் விடுக்கப்பட்டது.
டாஸ்மாக்குகளில் புதிதாக பார் அமைப்பதற்கு இந்த டெண்டர் எடுக்கப்பட்டு பலருக்கு டெண்டர் வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

செந்தில் பாலாஜி
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு நெருக்கமான சிலருக்கு டெண்டர் வழங்கியதாக பார் உரிமையாளர்கள் புகார் வைத்துள்ளனர். தங்களிடம் ஏற்கனவே இருந்த பார் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய நபர்களுக்கு பார் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதில் பல கோடி கை மாறி உள்ளது என்று பார் உரிமையாளர்கள் புகார் வைக்கின்றன.

செந்தில் பாலாஜி போராட்டம்
தங்களுக்கு பார் உரிமம் வழங்காமல் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் பார் உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்று பார் உரிமையாளர்கள் சங்கம் புகார் வைத்து உள்ளது. இதனால் இந்த டெண்டர்களை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் சிலர் நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதான் போராட்டமாகவெடித்துள்ளது .

பார் உரிமையாளர்கள் போராட்டம்
இதையடுத்து சென்னை, பசுமை வழி சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு இன்று பார் உரிமையாளர்கள் ஒன்று கூடி போராட்டம் செய்தனர். கிட்டத்தட்ட 100 பேர் ஒன்று கூடி செந்தில் பாலாஜி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். இதனால் அங்கு பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

செந்தில் பாலாஜி பார் உரிமையாளர்கள்
பொற்கால ஆட்சியில் ஒரு பொல்லாத அமைச்சர்.. அமைச்சரே உங்களுக்கு கோடி.. எங்களுக்கு தெரு கோடி என்ற வாசகங்கள் அடங்கிய போர்டுகளை வைத்துக்கொண்டு பார் உரிமையாளர்கள் அங்கு கோஷங்களை எழுப்பினார்கள். அங்கு உடனடியாக போலீஸ் குவிந்ததால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதையடுத்து போராட்டம் நடத்திய தமிழ்நாடு பார் உரிமையாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications