"நான் சொன்னது அத்தனையும் உண்மை.. ஒரு வார்த்தை கூட பொய் இல்லை!" பயில்வான் ரங்கநாதன் திட்டவட்டம்
சென்னை: பயில்வான் ரங்கநாதன் மீது தயாரிப்பாளர் கே.ராஜன் புகார் அளித்துள்ள நிலையில், இது தொடர்பாக அவர் அவரே விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளார்.
Recommended Video
தமிழ் சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்துத் தொடர்ந்து அருவருக்கத்தக்க வகையில் பேசுவதாகப் பயில்வான் ரங்கநாதன் மீது புகார்கள் உள்ளன.
பயில்வான் ரங்கநாதன் பேச்சுக்கள் இணையத்தில் தொடர்ச்சியாக வைரல் ஆகும் நிலையில், மறுபுறம் அவரது அருவருக்கத்தக்க பேச்சுக்களுக்கு எதிர்ப்புகளும் இணையத்தில் அதிகரித்தே வருகிறது.

பயில்வான் ரங்கநாதன் மீது புகார்
இதனிடையே சமீபத்தில் பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன் சென்னை போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். பயில்வான் ரங்கநாதன் எவ்வித ஆதாரமும் இல்லாமல் தொடர்ந்து பொய்யான தகவல்களை இணையத்தில் பரப்பி வருவதாகவும் இதன் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது. இதற்கிடையே தயாரிப்பாளர் கே.ராஜன் மீது பயில்வான் ரங்கநாதன் பதிலுக்குப் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

பொய் புகார்
அதில் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசும் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயில்வான் ரங்கநாதன் கூறி இருந்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பயில்வான் ரங்கநாதன், "எனக்குப் பத்திரிகைத் துறையில் 45 ஆண்டுக் காலம் அனுபவம் உள்ளது. என்னைப் பற்றி முற்றிலும் தவறான மற்றும் பொய்யான தகவல்கள் தயாரிப்பாளர் கே ராஜன் பேசி வருகிறார்.

மிரட்டுகிறார்
நான் தவறாகப் பேசுவதாக என் மீது புகார் அளித்துள்ள ராஜன் எதற்காக குடும்பத்தை விட்டுவிட்டு தனியார் விடுதியில் தங்கி இருக்கிறார்? பல விழாக்களிலும், டிவி சேனல்களிலும் அவர் தொடர்ந்து என்னைப் பற்றி அருவருப்பாகவும், தரக்குறைவாகவும் பேசியும் மிரட்டியும் வருகிறார். நான் யூடியூப் சேனல்களில் சினிமா துறையில் உள்ள பல்வேறு நடிகர், நடிகைகள் குறித்துப் பேசி உள்ளேன். என்னுடைய வாழ்க்கையின் அனுபவத்தை வைத்து யூடியூபில் பேசுகிறேன்.

வாழ வைக்கும் யூடியூப் சேனல்
ராதிகா என்னை அடித்தது திருவான்மியூரில்.. ஆனால் கே.ராஜன் பெசன்ட் நகர் என்று தவறாகச் சொல்லி உள்ளார். தவறு. எனக்குச் செய்தி எழுத கற்றுக் கொடுத்தவர் சி.பா.ஆதித்தனார். என்னை இப்போது யூ டியூப் சேனல்கள் மட்டுமே வாழ வைக்கிறது. ராஜன் கூறுவது முற்றிலும் பொய். நான் இதுவரை எந்த சினிமா நடிகர், நடிகைகளிடம் பணம் வசூலித்தலில்லை. நான் நடிகைகளைப் பற்றி பொய்யாகப் பேசுகிறேன் என்றால் நடிகைகள்தான் போலீசில் புகார் அளிக்க வேண்டும்.

பொய் சொல்லவில்லை
பொய்யாக நான் எதுவுமே பேசியதில்லை. தவறான தகவல்களை யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் தெரிவிப்பதில்லை. மேலும், நான் கூறியதில் எதுவுமே வதந்தி, பொய் என எதுவுமே இல்லை என்றும், என் மீது அளிக்கப்பட்ட புகார் எந்த ஆதாரமும் இல்லாதது" என்றும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கௌதம் மேனனுக்கு எதிராக திரும்பிய வழக்கு.. ரூ4.25 கோடியை வட்டியுடன் செலுத்த ஐகோர்ட் உத்தரவு! -
சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications