ஆளுநர் ரவி போட்ட அதிரடி உத்தரவு.. பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் செல்வம் பதவிகாலம் நீட்டிப்பு!
சென்னை: பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வத்தின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர் செல்வத்தின் பதவிக்காலத்தை நீட்டித்து தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக எம்.செல்வம் கடந்த 2021ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். அப்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், எம்.செல்வத்தை துணைவேந்தராக நியமனம் செய்தார்.

எம். செல்வம் 36 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வித் துறையில் அனுபவம் கொண்டவர். அழகப்பா பல்கலைக்கழகத்தின் சர்வதேச வணிக மற்றும் வர்த்தக மேலாண்மைத் துறை தலைவராகவும், பேராசிரியராகவும் இருந்தவர். அதைத் தொடர்ந்து, அவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், துணைவேந்தர் எம்.செல்வத்தின் பதவிகாலம் இந்த மாதத்துடன் நிறைவடையும் நிலையில், அவரது பதவிகாலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை, பாரதிதாசன் பல்கலை. துணைவேந்தராக எம். செல்வம் தொடர்வார்.












Click it and Unblock the Notifications