Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனிமேல் சென்னைக்கு இதுதான் ரூட்.. 2 நாளைக்கு "இந்த பக்கம்" மட்டும் போயிடாதீங்க.. திடீர்னு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகரில் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.. என்ன காரணம்?

சென்னையில் மெட்ரோ ரயிலுக்கான தேவை நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருகிறது.. மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் ஒருநாளைக்கு கிட்டத்தட்ட 4 லட்சம் வரை உள்ளது..இந்த எண்ணிக்கை இனி இன்னும் அதிகமாகும் என்றும் நம்பப்படுகிறது..

Big Announcement and traffic diversion for two days in Chennai metro train station construction works

விரைவான மற்றும் பாதுகாப்பான பயணத்திற்காகவே, மெட்ரோவை தேர்வு செய்யும் பணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிகிறது.

மெட்ரோ சேவை: அதேசமயம், சென்னையின் அனைத்து பகுதிகளையும் டவுன் பஸ்கள் போலவே, மெட்ரோ ரயில் வழித்தடத்தையும் இணைத்தாக வேண்டியுள்ளது... இதற்கான மெட்ரோவின் 2ம்கட்ட விரிவாக்க பணிகளும் துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றன

சென்னையை பொறுத்தவரை 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன.. சென்ட்ரலிலிருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூர் வரை ஒரு வழித்தடமும், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக மற்றொரு வழித்தடமும் செயல்பட்டு வருகின்றன.

கட்டுமான பணிகள்: இதனிடையே மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலை ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் கட்டப்பட உள்ளது. இதையொட்டி, கட்டுமான பணிகளுக்காக போக்குவரத்தில் அவ்வப்போது மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன..

இப்படித்தான், கடந்த 3-ம் தேதி சோதனை முயற்சியாக சில சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் சென்னையில் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.. மெட்ரோ கட்டுமான பணிக்காக மார்ச் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா மேம்பாலம்: இதையொட்டி அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலை ஆகிய இடங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இதன்படி சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை வழியாக திருப்பி விடப்படும்.

அதேபோல, ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள், எம்ஜிஆர் சாலை வழியாக வள்ளுவர் கோட்டம் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமைந்தகரை செல்லும் வாகனங்கள் டேங்க் மண்ட், நெல்சன் மாணிக்கம் சாலை வழியை பயன்படுத்தலாம் என்றும் போக்குவரத்து துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+